
அரியலூர் ஸ்ரீ ராமஜெயம் திருமண மண்டபத்தில் மாவட்ட அதிமுக சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தொடர் ந்து அவர் பேசுகையில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் , இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தன்னை 25000/- வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கும், பொது மக்களுக்கும் அதற்காக கடுமையாக உழைத்த
அதிமுக மாவட்ட ,ஒன்றிய, கிளை கட்சி நிர்வாகிகளுக்கும் தனது நன்றியினை தெரி வித்தார். இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ப .இளவழகன்,மாவட்ட இணை செயலாளர் பவானி, துணை செயலாளர் தங்க. பிச்சமுத்து, மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேட்டு ராஜேந்திரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஒபி சங்கர், மா.இணை செயலாளர் நா. பிரேம்குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்சிவசங்கர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜீவா அரங்நாதன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கல்லங்குறிச்சி சு. பாஸ்கர், ஓ வெங்கடாஜலபதி, கொடுக்கூர் ராஜா, அக்பர் ஷெரீப், சாமி நாதன், சிவ குணசேகரன், குருவாடிமுருகேசன், முல்லை அகிலன், திருமுருகன், பொதுக்குழு உறுப்பினர் வைகோ சிவபெருமாள், ஒன்றிய அதிமுக செயலாளர் கள் பொய்யூர் பாலசுப்பிர மணியம், செல்வராசு,
வழக்கறிஞர்அசோகன்,விக்ரம பாண்டியன்,கல்யாணசுந்தரம் வடிவழகன்,சாமிநாதன்,வைத்தியநாதன், எம் ஜி ராமச் சந்திரன், நகரச் செயலாளர்கள்
ஏபி செந்தில், பி ஆர் செல்வ ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
<b> Total Views: 10 </b>

