சமயபுரம் அருகே பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறல் புகார் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

  திருச்சி: சமயபுரம் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் பாதிரியாருமான ஜெயராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடைப் பகுதியில் புனித மரியன்னை அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், தனது தோழியுடன் வேன் […]

Continue Reading

திருச்சி பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வளாக நேர்காணல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம், கொணலை கிராமத்தில் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் (Campus Interview) நடைபெற்றது. கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் வகையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் வளாக நேர்காணல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை Besant Technologies நிறுவனத்தின் சார்பில் இந்த வளாக நேர்காணல் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, […]

Continue Reading

திருச்சி பொறியியல் கல்லூரியில் 80-ஆவது சுதந்திர தின விழா

  திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்த கொணலையில் அமைந்துள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில் நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி கல்லூரி வளாகம் தேசியக் கொடி மற்றும் தேசப்பற்று உணர்வை ஏற்படுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கமாக கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். கலைச்செல்வன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதனைத் தொடர்ந்து கல்லூரியின் தலைவர் முனைவர் சுஜாதா சுப்ரமணியம் முன்னிலை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை […]

Continue Reading

துறையூரில் தானிய சேமிப்புக்கு புதிய வசதி – 7,500 மெட்ரிக் டன் வாடகை கிடங்கு திறப்பு

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் வெங்கட்ரமணன் திறந்து வைத்தார் துறையூர்: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் தனியார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 7,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வாடகை உணவு தானியக்கிடங்கை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் வெங்கட்ரமணன் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முத்தையம்பாளையம் பகுதியில் தனியாரால் கட்டப்பட்டுள்ள இந்த தானியக்கிடங்கில் நெல், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பாக […]

Continue Reading

போதையில்லா தமிழகம்: திருச்சி பொறியியல் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அடுத்த கொணலை கிராமத்தில் உள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் “போதையில்லா தமிழகம்” என்ற தலைப்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரித் தலைவர் முனைவர் சுஜாதா சுப்ரமணியம், செயலாளர் பொறியாளர் சூர்யா சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் த. முத்தமிழ்ச்சுடர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ப. பிரபாகரன், புல முதல்வர் முனைவர் […]

Continue Reading

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருச்சி பொறியியல் கல்லூரியில் தூய்மைப் பணி… 60 மாணவர்கள் பங்கேற்பு

  திருச்சி திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அடுத்த கொணலை கிராமத்தில் அமைந்துள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் “தூய்மை இந்தியா” என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டத்தின் சமூகப் பணிகளில் ஒன்றாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்கள் மத்தியில் தூய்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதாகும். மேலும், கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாக பராமரிப்பதன் அவசியம் […]

Continue Reading

ஸ்டாலின் தான் தற்போது தனித்து விடப்பட்டுள்ளார் – திருச்சியில் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பேட்டி

  செய்தியாளர்  : அருண் – 90959 25936 மாமன்னர் தீரன் சின்னமலையின் 212வது நினைவு தினத்தையொட்டி திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் உள்ள தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் நவல்பட்டு விஜி, தினேஷ், கதிரவன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து அறநிலைதுறை அமைச்சர் ரமேஷ் இந்தியா முழுவதும் உள்ள தலைவர்கள் பாராட்டும் வகையில் […]

Continue Reading

ஆடி 18 விழாவை முன்னிட்டு அம்மா மண்டபம் படித்துறையில் சிறப்பு ஏற்பாடுகள் – நீராட 40 தண்ணீர் குழாய்கள் அமைப்பு

  செய்தியாளர் : அருண் 90959 25936 ஆடி மாதத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு (ஆடி 18) விழா வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் புதுமணத் தம்பதிகள் ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி தங்களது தாலியை மாற்றிக்கொள்வது வழக்கமாகும். மேலும், குடும்ப நலன், வளம் மற்றும் நீண்ட ஆயுளை வேண்டி பெண்கள் சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபடுவார்கள். திருச்சி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு […]

Continue Reading

திருச்சியில் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி முன்னாள் எம்.எல்.ஏ பழனியாண்டி தொடங்கி வைத்தார்

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா பிரதர்ஸ் நடத்தும் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அல்லித்துறையில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. இப்போட்டியை ஸ்ரீரங்கம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி விளையாட்டு வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து போட்டியை தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கபடி போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் […]

Continue Reading

22 லட்சம் விவசாயக் குடும்பங்கள் கடன் சுமையில் தவிப்பு; தேர்தல் வாக்குறுதியை அரசு காப்பாற்ற வேண்டும்” – ஈசன் முருகசாமி திருச்சியில் பேட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் அளித்த வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் நிலம் வரை வைத்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கல்லக்குடியில் மாபெரும் பேரணி மற்றும் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். லால்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார் இந்த போராட்டத்தில் ஆயிரணகணக்கான […]

Continue Reading