திருச்சி பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வளாக நேர்காணல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம், கொணலை கிராமத்தில் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் (Campus Interview) நடைபெற்றது. கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் வகையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் வளாக நேர்காணல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை Besant Technologies நிறுவனத்தின் சார்பில் இந்த வளாக நேர்காணல் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, […]

Continue Reading

துறையூரில் இருந்து சமயபுரத்திற்கு புதிய பேருந்து சேவை – துணை சபாநாயகர் ரவிசங்கர் தொடங்கி வைத்தார்

  துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து புலிவலம், மணச்சநல்லூர் வழியாக சமயபுரம் செல்லும் புதிய அரசு பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது. புதிய பேருந்து சேவையை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் தொடங்கி வைத்தார். துறையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. விழாவில் புதிய பேருந்தை துணை சபாநாயகர் ரவிசங்கர் கொடியசைத்து தொடங்கி […]

Continue Reading

கீரம்பூர் ஏரி உபரி நீரால் 500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிப்பு – பாலம் அமைக்கக் கோரி மனு

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கீரம்பூர் பகுதியில் உள்ள ஏரி, மழைக்காலங்களில் நிரம்பி உபரி நீர் வெளியேறும் போது, சூரமாரி ஆற்றுப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் கீரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தொடர்ந்து பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உபரி நீர் செல்லும் பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் […]

Continue Reading

துறையூர் அருகே விவசாயிகள் பாலை தரையில் ஊற்றி போராட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ஆர்பாட்டம். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் ஆவின் பால் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு இப்பகுதியைச் சேர்ந்த மாடு வளர்ப்போரிடமிருந்து தினமும் சுமார் 10,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாகவே லிட்டருக்கு பால் 30 முதல் 36 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை தங்களுக்கு கட்டுபடி ஆகவில்லை என மாடு வளர்க்கும் […]

Continue Reading

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் பொது வாழ்க்கையை விட்டு விலகுவேன்” – துணை சபாநாயகர் ரவிசங்கர்- உதயநிதி – வீடியோ

திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 100 நாள் ஆட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை சபாநாயகர் ரவிசங்கர், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியதுடன், அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என சவால் விடுத்துப் பேசினார். பொதுக்கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், “இனி வருகின்ற எந்தத் தேர்தலாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்றக் கழகம் […]

Continue Reading

நாகப்பட்டினத்தில் மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

நாகப்பட்டினம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பில், சர் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் உத்தரவின்படியும், சென்னை சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா அறிவுரையின்படியும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் K.K. பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செல்போன் மற்றும் சமூக வலைதளங்களை […]

Continue Reading

திருச்சி பொறியியல் கல்லூரியில் 80-ஆவது சுதந்திர தின விழா

  திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்த கொணலையில் அமைந்துள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில் நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி கல்லூரி வளாகம் தேசியக் கொடி மற்றும் தேசப்பற்று உணர்வை ஏற்படுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கமாக கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். கலைச்செல்வன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதனைத் தொடர்ந்து கல்லூரியின் தலைவர் முனைவர் சுஜாதா சுப்ரமணியம் முன்னிலை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை […]

Continue Reading

அரியலூரில் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்தக் கோரி முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

  அரியலூர்: அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரை நிரந்தரப்படுத்தக் கோரி, தமிழ்நாடு ஏஐடியுசி உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனம் சார்பில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அரியலூர் நகராட்சி ஏஐடியுசி சுகாதாரத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், அரியலூர் திருச்சி சாலையில் உள்ள அஞ்சல் அலுவலகம் மூலம் முதலமைச்சரின் முகவரிக்கு 90 அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டன. அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் 300-க்கும் […]

Continue Reading

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியில் மீண்டும் துரோகம்

காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் தங்க.தர்மராஜன் குற்றச்சாட்டு தூத்தூர்: கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி அறிவிப்பில் தமிழக அரசு 3-வது முறையாகவும் குளறுபடியான அறிவிப்பை வெளியிட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளதாக காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் தங்க.தர்மராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது தமிழக வெற்றி கழக தலைவர் தஞ்சை டெல்டா பகுதியில் விவசாயிகளின் அடையாளமான பச்சை […]

Continue Reading

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் தலைமை நிர்வாகியும் மாவட்ட வருவாய் அலுவலருமான பி.மணிராஜ் தலைமையில் நடைபெற்றது. தலைமை கரும்பு அலுவலர் (பொறுப்பு) ஜி.சுரேஷ் வரவேற்றார். கூட்டத்தில், கரும்பு டன்னுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.709.50 ஊக்கத்தொகையுடன் மொத்த கொள்முதல் விலை ரூ.4,000 ஆக உயர்ந்துள்ளதற்கு விவசாய சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். தற்போதைய சூழ்நிலையில் டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். […]

Continue Reading