நாகப்பட்டினத்தில் மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

நாகப்பட்டினம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பில், சர் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் உத்தரவின்படியும், சென்னை சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா அறிவுரையின்படியும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் K.K. பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செல்போன் மற்றும் சமூக வலைதளங்களை […]

Continue Reading

காவிரி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: பாலகிருஷ்ணன்

நாகப்பட்டினம்: காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிதியளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு […]

Continue Reading

வேளாங்கண்ணி, செருதூரில் கடலரிப்பு தடுப்பு மற்றும் கரை பாதுகாப்புப் பணிகள்

செய்தியாளர் : விஜய் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் நேரில் ஆய்வு நாகப்பட்டினம், ஆக.12: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் நடைபெற்று வரும் கடலரிப்பு தடுப்புப் பணிகள் மற்றும் செருதூர் வெள்ளையாறு முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் கரை பாதுகாப்புச் சுவர் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேளாங்கண்ணி பகுதியில் சுமார் 1,500 மீனவர்கள் வசித்து வருகின்றனர். சுமார் 150 மீன்பிடி படகுகளைக் கொண்டு மீன்பிடித் தொழிலில் […]

Continue Reading

நீட் தேர்வில் 599 மதிப்பெண்கள்: அரசு பள்ளி மாணவர் தரவரிசையில் நாகை தினேஷ் முதலிடம்

நாகப்பட்டினம் : வேதாரண்யம் வட்டம் பெரியகுத்தகை கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் மு.தினேஷ், நீட் 2026 தேர்வில் 599 மதிப்பெண்கள் பெற்று, தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டு தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற தினேஷின் சாதனையை பாராட்டும் வகையில், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (11.08.2026) பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற […]

Continue Reading

நாகையில் ‘போதையில்லா தமிழ்நாடு’ பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு

செய்தியாளர் : விஜய் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு நாகப்பட்டினம், ஆக.11: தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற ‘போதையில்லா தமிழ்நாடு’ பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார், இ.ஆ.ப., கலந்து கொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை […]

Continue Reading

வறண்ட வாய்க்காலில் ஆடிப்பெருக்கு… நீச்சலடித்து விவசாயிகள் போராட்டம்!

செய்தியாளர் : விஜய் நாகை, ஆக. 3: நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி கிராமத்தில், காவிரி நீர் வராததால் வறண்டு கிடக்கும் பாசன வாய்க்காலில் ஆடிப்பெருக்கு விழாவை விவசாயிகள் மற்றும் பெண்கள் நூதன முறையில் கடைப்பிடித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்த்தனர். வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால், பூ, பழம் வைத்து படையலிட்டு, விளக்கேற்றி பெண்கள் வழிபாடு நடத்தினர். மேலும், பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் மஞ்சள் கயிறு கட்டி பாரம்பரிய சடங்குகளை மேற்கொண்டனர். கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் […]

Continue Reading

போலி தொழிலாளர்களை நீக்கி உண்மையான கட்டுமானத் தொழிலாளர்களை நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை

செய்தியாளர் : விஜய் தமிழக கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் 27-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புதிய மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் எஸ். துரையரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். விழாவில் புதிய நிர்வாகிகள் பதவியேற்று, தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதுடன் சங்க வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட உறுதியேற்றனர். மேலும், கல்வி உதவி, […]

Continue Reading

செம்போடை வெளி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

செய்தியாளர் : விஜய் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு வெளி மாரியம்மன் ஆலய ஆடி உற்சவ திருவிழா பக்தி பரவசத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு அருள் பெற்றனர். திருவிழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 17-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் உற்சவ நிகழ்ச்சிகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து தினமும் காத்தவராயன் கதை நிகழ்ச்சி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை […]

Continue Reading

காலி குடங்களுடன் அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்: நாகப்பட்டினம் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

செய்தியாளர் : விஜய் நாகப்பட்டினம், ஆக. 1: நாகப்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர நகர்மன்றக் கூட்டம், நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் 36 வார்டுகளைச் சேர்ந்த திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும், நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நீடித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் காலி குடங்களை ஏந்தியபடி கூட்டரங்கிற்குள் நுழைந்த அவர்கள், […]

Continue Reading

நாகப்பட்டினத்தில் மகளிர் தொழில் முனைவோர் தேர்வு நேர்காணல்: மாவட்ட ஆட்சியர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் பங்கேற்பு

செய்தியாளர்: விஜய் நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் மற்றும் தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கும் நிறுவனம் (TN-RISE) சார்பில் மகளிர் தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுக்கும் நேர்காணல் முகாம் இன்று (28.07.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஊரகப் பகுதியைச் சேர்ந்த திறன்மிகு மகளிர் தொழில்முனைவோரைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பம், நிதியுதவி, வழிகாட்டுதல் மற்றும் சந்தை வாய்ப்புகளை […]

Continue Reading