பெரம்பலூரில் அகழ் அரங்கம் துவக்க விழா

  செய்தியாளர் : கேப்டன் வசந்த்…    பெரம்பலூர் ரோஸ் கார்டன் பகுதியில் அகழ் குழுமத்திற்கு சொந்தமான அகழ் அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூரின் வரலாற்று ஆசிரியர் ஜெயபால் ரத்தினம், கவிஞர் சாரங்கபாணி, கவிஞர் ராமர், மொழிபெயர்ப்பாளர் மூர்த்தி, எழுத்தாளர் மோகன். இ. தாகிர் பாட்ஷா, பேச்சாளர் காருண்யா, தலைமை ஆசிரியர் மலர்கொடி, இலக்கிய ஆர்வலர் சுரேஷ்குமார், அகழ் பொறுப்பாளர் ஸ்ரீகாந்த், திவ்யா மற்றும் தலைமை ஆலோசகர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து […]

Continue Reading

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி: வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

  செய்தியாளர் : கேப்டன் வசந்த்…   பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், பாலக்கரையில் அமைந்துள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா, எம்.பி., கலந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பதிவான வாக்குகள் […]

Continue Reading

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா: இன்று ஸ்ரீ சண்டி மகாயாகம்

  செய்தியாளர் : கேப்டன் வசந்த்….   பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் அமைந்துள்ள மதுரகாளியம்மன் கோவில் வளாகத்தில் சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு நடைபெறும் ஆன்மிக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற இக்கோவிலில், சென்னை கோட்டூரில் இயங்கி வரும் ஸ்ரீமஹா மேரு மண்டலி சார்பில் ஆண்டுதோறும் உலக நன்மைக்காக ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம கோடி குங்குமார்ச்சனை மற்றும் ஸ்ரீ சண்டியாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் 17-வது ஆண்டு விழா நேற்று தொடங்கியது. மண்டலியின் […]

Continue Reading

பெரம்பலூர்: வாக்கு எண்ணும் நாளுக்கான முன்னேற்பாடுகள் – அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

செய்தியாளர் கேப்டன் வசந்த் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 04.05.2026 அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வாக்கு எண்ணும் நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று (30.04.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் முன்னிலை வகித்தார். […]

Continue Reading

பெரம்பலூர்: வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு – மூன்றடுக்கு பாதுகாப்பு உறுதி

செய்தியாளர் கேப்டன் வசந்த் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையமாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதவ் பப்ளிக் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி, இ.ஆ.ப., இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் VVPAT கருவிகள் தனித்தனியான பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையம் மூன்றடுக்கு […]

Continue Reading

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு நன்றி – வீ. ஜெகதீசன்

செய்தியாளர் கேப்டன் வசந்த் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்ட கழக வேட்பாளர்களுக்காக இரவு பகல் பாராமல் தேர்தல் பணியாற்றிய தி.மு.க. மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கோடான கோடி நன்றியை மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தெரிவித்துள்ளார். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,கழகத் தலைவர் […]

Continue Reading

பெரம்பலூரில் வாகன சோதனையில் ரூ.2.44 கோடி பறிமுதல் – இருவர் விசாரணையில்

பெரம்பலூர். ஜீவா பெரம்பலூர், ஏப்ரல் 21: பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை அருகே நேற்று இரவு சுமார் 12 மணியளவில், கலால் மேற்பார்வை அலுவலர் பழனிசெல்வன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குன்னம் தொகுதிக்குட்பட்ட கீழ்ப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் கிருஷ்ணன் (25) இயக்கிய காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் பயணம் செய்த கீழ்ப்புலியூரைச் சேர்ந்த திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன் (64) […]

Continue Reading

குன்னம் தொகுதியில் பாரிவேந்தர் – ஜி.கே. வாசன் தீவிர பிரச்சாரம்

செய்தியாளர் சுபாஷ் செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்தின் காரை கிராமத்தில், இந்திய ஜனநாயகக் கட்சி (IJK) வேட்பாளர் சரண்யா அன்பழகனுக்கு ஆதரவாக ஐஜேகே தலைவர் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இணைந்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். முன்னதாக ஆலத்தூர் கேட் பகுதியில் இருந்து இருசக்கர வாகனப் பேரணியுடன் பாரிவேந்தர் மற்றும் ஜி.கே. வாசனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சாரத்தின் […]

Continue Reading

அகரம்சீகூர் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ40–50 வசூல் குற்றச்சாட்டு

செய்தியாளர்: சுபாஷ் செல்வம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சுற்றுவட்டாரத்தில் உள்ள அகரம்சீகூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அந்த நிலையத்தில் பணியாற்றி வரும் PC தமிழ்வேந்தன் என்பவர், நெல் மூட்டைக்கு ரூ40 முதல் 50 வரை சட்டவிரோதமாக வசூல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வசூல் காரணமாக, ஏற்கனவே பல சிரமங்களை சந்தித்து வரும் விவசாயிகள் கூடுதல் நிதிச்சுமையை […]

Continue Reading

பெரம்பலூரில் நரிக்குறவர் காலனி மக்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைப்பு

நியூஸ் ஜீவா பெரம்பலூர், ஏப்.19: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், எறையூர் சர்க்கரை ஆலை அருகிலுள்ள நரிக்குறவர் காலனியில், பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகிய பொதுமக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சி, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி மேற்பார்வையாளர்களான வழக்கறிஞர் ம.க.ச. இரத்தினவேல் மற்றும் வழக்கறிஞர் மு. உதயகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள், கட்சியின் கொள்கைகளை ஏற்று தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கருத்துரை வழங்கிய சாக்யமணிவண்ணன், […]

Continue Reading