பெரம்பலூரில் திமுக வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமிக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு

செய்தியாளர் சுபாஷ் செல்வம் பெரம்பலூர், ஏப். 19: பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமிக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பாளர் ஜெயசீலன் தலைமையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு தேவேந்திர குல பேரவை மாவட்ட செயலாளர் நித்திஷ் குமார், வளரும் தமிழகம் மாவட்ட செயலாளர் செல்வன், தீபக் பாண்டியன் பேரவை மாவட்ட செயலாளர் திரவிந்த்ராஜ், தமிழ் மாநில […]

Continue Reading

பா.ஜ.க. குனியச் சொன்னால், படுத்தே விட்டார் பழனிசாமி -மு.க. ஸ்டாலின்

நியூஸ் ஜீவா பெரம்பலூர் பா.ஜ.க. குனியச் சொன்னால், படுத்தே விட்டார் பழனிசாமி; இப்படிப்பட்ட அடிமைகளின் துணையோடு தமிழ்நாட்டிற்குள் நுழைய நினைப்பவர்களை எல்லையிலேயே நாம் தடுத்து நிறுத்த வேண்டும்! பா.ஜ.க.விடம் தமிழ்நாடு சிக்கினால், ஜம்மு காஷ்மீரை உடைத்தது போன்று தமிழ்நாட்டையும் மூன்று யூனியன் பிரதேசமாகத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவார்கள்! கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.04.2026) பெரம்பலூரில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம்: “வாழ்ந்தவர் கோடி […]

Continue Reading

குன்னம் தொகுதியில் IJK வேட்பாளர் சரண்யாவுக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி தீவிர பிரச்சாரம்

செய்தியாளர் சுபாஷ் செல்வம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK) வேட்பாளர் திருமதி சரண்யாவுக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது பொதுமக்களைச் சந்தித்து உரையாற்றிய அவர், “நாம் இருளில் தூங்காமல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். விரைவில் விடியல் வரும், விடியல் வரும் என்று நம்மை நாமே நம்ப வைத்து கொண்டு இருக்கிறோம்,” என்று தெரிவித்தார். மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையை மாற்ற மக்கள் ஒன்றுபட்டு, இந்தத் […]

Continue Reading

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கருப்பு கொடிகளை ஏற்றி அறப்போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் ஜீவா பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்னாள் மண்டல அமைப்பு செயலாளர் தலைமையில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை எதிர்த்து இன்று துறைமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தில் விசிக உறுப்பினர்களுடன் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடிகளை ஏற்றி கண்டன கோஷம் எழுப்பி அறப்போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது; ​மத்திய அரசு இன்று அவசரகதியில் பாராளுமன்றத்தைக் கூட்டுகிறார்கள். இத்தகைய செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த […]

Continue Reading

பணியில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமனுக்கு காவல்துறை மரியாதை

தலைப்பு: பணியில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமனுக்கு காவல்துறை மரியாதை   செய்தியாளர்: ஜீவா   பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமன், பணியின் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் சிக்கி கடந்த 14.04.2026 அன்று உயிரிழந்தார். மறைந்த ஜெயராமனின் உடலுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் முழு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் தலைமையில் மலர் வளையம் […]

Continue Reading

பெரம்பலூரில் அம்பேத்கர் சிலைக்கு ஆ.இராசா எம்.பி. மரியாதை

செய்தியாளர் : ஜீவா பெரம்பலூர்: பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள B. R. Ambedkar அவர்களின் சிலைக்கு மேனாள் ஒன்றிய அமைச்சர் மற்றும் கழக துணைப் பொதுச்செயலாளர் A. Raja எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்திற்கும் ஆ.இராசா எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாநில பொறியாளர் அணி துணைச் […]

Continue Reading

பெரம்பலூர்: வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

பெரம்பலூர்: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பணியாற்றவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான மூன்றாம் கட்டப் பயிற்சி வகுப்புகள் இன்று (15.04.2026) நடைபெற்றன. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப. அவர்கள் இந்தப் பயிற்சி மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பயிற்சி நடைபெற்ற இடங்கள் 147-பெரம்பலூர் (தனி): கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. 148-குன்னம்: மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. பெரம்பலூர் தொகுதியில் […]

Continue Reading

பெரம்பலூரில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை: 4 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பு!

பெரம்பலூர் | ஏப்ரல் 15: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட நான்கு முக்கிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை (ஏப்ரல் 16) மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கழகத் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.இராசா எம்.பி. அவர்களின் வழிகாட்டுதல்படியும், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களின் […]

Continue Reading

தேவேந்திர குல வேளாளர் நலச்சங்க மாவட்ட மாநாடு

பெரம்பலூரில் தேவேந்திர குல வேளாளர் நலச்சங்க 5வது மாவட்ட மாநாடு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு நிறுவனர் ஜெயபாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், பிரவீன், சங்கர் (எ) மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஆலோசகர் ஜெயராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தேவேந்திர குலவேளாளர் பட்டியல் வெளியேற்றம் வழங்கவேண்டும், தியாகி இம்மானுவேல் சேகரனார் மற்றும் சுந்தரலிங்கனார் சிலை செஞ்சேரி கிராமத்தில் அமைக்கவேண்டும், பெரம்பலூர் தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு உள்ளாட்சி அமைப்பில் […]

Continue Reading

நாரணமங்கலத்தில் டாக்டர் எஸ்.டி. ஜெயலெட்சுமிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளரான டாக்டர் எஸ்.டி. ஜெயலெட்சுமி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கிராம பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்து, தங்களது முழு ஆதரவையும் தெரிவித்தனர். பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து பேசினார் ஜெயலெட்சுமி, தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விளக்கமளித்து ஆதரவு கோரினார். இந்த நிகழ்ச்சியில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் […]

Continue Reading