அரியலூரில் சுதந்திர தின விழா: ரூ.3.13 கோடி நலத்திட்ட உதவிகள்

அரியலூர், அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சமாதானத்தின் அடையாளமாக புறாக்களைப் பறக்கவிட்ட மாவட்ட ஆட்சியர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 51 பயனாளிகளுக்கு ரூ.3.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக பணியாற்றிய 45 காவலர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 285 அரசு அலுவலர்களுக்கு […]

Continue Reading

துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா

விழாவையொட்டி சார் பதிவாளர் மகாராஜன், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை அடுத்து, சார் பதிவாளர் மகாராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அலுவலகப் பணியாளர்கள் பிரேமலதா, சுகந்தி, தீபிகா, பாலாஜி, சக்தி, முருகன், வேல்முருகன் மற்றும் பத்திர எழுத்தாளர்கள், உதவியாளர்கள் மணி, சுதாகர், சுரேஷ், சின்னராசு, சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   <b> […]

Continue Reading

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா

வட்டாட்சியர் சித்ரா தேசியக் கொடியேற்றி மரியாதை துறையூர்: நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசு அலுவலகங்களிலும் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் துறையூர் வட்டாட்சியர் சித்ரா கலந்து கொண்டு, அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவின் சுதந்திரத்திற்காக […]

Continue Reading

உடையார்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மக்கள் சந்திப்பு நடைபயணம்

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து பிரசாரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் மக்கள் சந்திப்பு மற்றும் பரப்புரை இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட உடையார்பாளையம் நகரில் மக்கள் சந்திப்பு நடைபயணம் நடைபெற்றது. இதையொட்டி, உடையார்பாளையம் கடைவீதியில் இருந்து தொடங்கிய நடைபயணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாகவும், […]

Continue Reading

காவிரி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: பாலகிருஷ்ணன்

நாகப்பட்டினம்: காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிதியளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு […]

Continue Reading

துறையூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருச்சி மாவட்டம், துறையூர் அருகே காளிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துறையூர் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணி, திருச்சி சாலை, அண்ணா பேருந்து நிலையம் மற்றும் காவல் நிலையம் வழியாக சென்று நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து […]

Continue Reading

வேளாங்கண்ணி, செருதூரில் கடலரிப்பு தடுப்பு மற்றும் கரை பாதுகாப்புப் பணிகள்

செய்தியாளர் : விஜய் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் நேரில் ஆய்வு நாகப்பட்டினம், ஆக.12: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் நடைபெற்று வரும் கடலரிப்பு தடுப்புப் பணிகள் மற்றும் செருதூர் வெள்ளையாறு முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் கரை பாதுகாப்புச் சுவர் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேளாங்கண்ணி பகுதியில் சுமார் 1,500 மீனவர்கள் வசித்து வருகின்றனர். சுமார் 150 மீன்பிடி படகுகளைக் கொண்டு மீன்பிடித் தொழிலில் […]

Continue Reading

துறையூரில் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி

துறையூர் : திருச்சி மாவட்டம், துறையூர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது. துறையூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வீரமணி தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர், அங்கக மற்றும் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல், உயிர் உரங்களை பயன்படுத்துதல் மற்றும் […]

Continue Reading

அரியலூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சிபிஐ கட்சியினர் மக்கள் சந்திப்பு பிரசாரம்

அரியலூர், ஆக.11: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக, அரியலூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் நடைபயண மக்கள் சந்திப்பு பிரசாரம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் ஒன்றிய குழு சார்பில் நடைபெற்ற இந்த பிரசார இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் கே.நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட […]

Continue Reading

அரியலூரில் பெண் தொழில் முனைவோருக்கு ‘சாதனையாளர் 2026’ விருது

அரியலூர்: அரியலூர் மாவட்ட பெண்கள் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் ‘ஸ்டார் எக்ஸ்போ 2026’ கண்காட்சி டி.டி.வி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் தொழில் முனைவோர் பங்கேற்று தங்களது தயாரிப்புகளுக்கான விற்பனை அரங்குகளை அமைத்திருந்தனர். பெண் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் யோகா மற்றும் சிலம்பம் பயிற்சி மையம் சார்பில் ‘மகளிர் தொழில் முனைவோர் சாதனையாளர் 2026’ விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் […]

Continue Reading