அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனுக்கு அவர் சொந்த கிராம பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அரசு தலைமை கொறடாவும், மாவட்ட அதிமுக செயலாளருமான தாமரை எஸ். ராஜேந்திரன், அவரது சொந்த கிராமமான தாமரைக் குளத்திற்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு அவரது சொந்த கிராம பொதுமக்கள், பட்டாசு வெடித்து, பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அதிமுக அவைத் தலைவர் இராம ஜெயலிங்கம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓ.பி சங்கர், மாவட்ட இணை செயலாளர் பிரேம்குமார், ஒன்றிய […]

Continue Reading

அரியலூர் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அரியலூர்,மார்ச்28: அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சியில் எழுந்தருளி உலகப் பிரசித்திப் பெற்ற கலியுக ஸ்ரீ வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா, ஆண்டு தோறும் இராம நவமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் பெருந்திருவிழா நடை பெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான பெருந் திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொடியேற்ற நிகழ்வில் கலியுக ஸ்ரீ வரத ராசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட கொடி கம்பத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, கருடன் உருவம் பொறிக்கப்பட்ட […]

Continue Reading

அரியலூர் அருகே பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

அரியலூர் அருகே உள்ள லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையம் அரசு உதவிபெறும் கே.ஆர்.வி. நடுநிலைப் பள்ளியில், திருச்சி அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பள்ளியின் செயலாளர் புகழேந்தி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். திருச்சி அகர்வால் கண் மருத்துவமனை மேலாளர் டாக்டர் கணபதி சுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர் தனபால், விழி பரிசோதகர்கள் சத்தியபாமா மற்றும் நிஷாந்தினி […]

Continue Reading

அரியலூர் அருகே மூதாட்டி கொலை – 15 பவுன் நகைகள் கொள்ளை: உறவினர் உட்பட இருவர் கைது

  விக்கிரமங்கலம், மார்ச் 25: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பெரிய திருக்கோணம் நடுத்தெருவை சேர்ந்த ராஜலட்சுமி (72) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டு, 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 20ஆம் தேதி, வீட்டில் தனியாக இருந்த ராஜலட்சுமியிடம் இரண்டு இளைஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் பெயரில் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர், தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு, பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை […]

Continue Reading

அமைச்சர் சிவசங்கர் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூரில் அன்னதானம், இனிப்பு வழங்கல்

அரியலூர்: மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.   இதனை முன்னிட்டு தொமுச நிர்வாகிகள் சார்பில் சுப்ரமணிய சுவாமி கோயில், ஸ்ரீ கோதண்டராம பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அவரது நலனுக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.   தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக, ராஜாஜி நகரில் செயல்படும் சாந்தம் முதியோர் இல்லத்தில் […]

Continue Reading

அரியலூர் அருகே மூதாட்டி மர்ம மரணம்: 15 பவுன் நகை கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை

    விக்கிரமங்கலம், மார்ச். 21 அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்ததுடன், அவரிடமிருந்த 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   விக்கிரமங்கலம் அடுத்துள்ள பெரிய திருக்கோணம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (72). இவரது கணவர் துரைசாமி 15 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். ராஜலட்சுமி தனது பேரனான வசந்த் (35) என்பவரது வீட்டின் மாடியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று காலை, […]

Continue Reading

அரியலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அதிமுக தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அரியலூர் அண்ணா சிலை அருகே ,தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், அதிமுக தலைமையில் ஆளும் திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர்,முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் இராஜேந்திரன் தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் மாவட்ட அதிமுக அவை தலைவர் ஜெ.கே.என் இராமஜெயலிங்கம் வரவேற் றார்.தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கள் குறித்தும்.சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப்பொருட்கள் […]

Continue Reading

அரியலூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி – மாவட்ட ஆட்சியர் விளக்கம்

    அரியலூர் மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற வதந்தி பரவியதைத் தொடர்ந்து, பல பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எரிபொருள் விநியோகம் தொடர்ந்து சீராக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களும் வழக்கம்போல திறந்து […]

Continue Reading