விக்கிரமங்கலம் அருகே சட்டவிரோத மணல் கடத்தல் – டிராக்டர் பறிமுதல், இளைஞர் கைது

விக்கிரமங்கலம், ஏப்ரல் 5: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் நேற்று காலை விக்கிரமங்கலம்–விக்கைகாட்டி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருக்கோணம் பிரிவு சாலை அருகே எதிரே வந்த டிராக்டரை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை செய்தனர். சோதனையில், அந்த டிராக்டரில் சுண்டக்குடி மருதையாறு படுகை […]

Continue Reading

கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் தேர்த்திருவிழாவில் ரெட் கிராஸ் சார்பில் பக்தர்களுக்கு உதவி – வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

அரியலூர் அருகே கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்ற சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட கிளை சார்பில் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில், விழாவிற்கு திரளாக வந்திருந்த பக்தர்களுக்கு சுமார் 2,000 தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வு, அரியலூர் மாவட்ட தலைவர் செ. ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் […]

Continue Reading

ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக வேட்பாளர் க. வைத்திலிங்கம் வேட்பு மனு தாக்கல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் க.வைத்திலிங்கம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மனோகரனிடம் அவர் வேட்பு மனுவை வழங்கினார். இந்நிகழ்வில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகளான மாவட்ட அதிமுக அவைத்தலைவர் ஜே.கே.என். இராமஜெயலிங்கம், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மருத்துவர் பரமேஸ்வரி, அதிமுக மாவட்ட துணை செயலாளர் […]

Continue Reading

ஜெயங்கொண்டம் தொகுதி யில் தவெக வேட்பாளர் கவிதா.ஜி இராஜேந்திரன் வேட்பு மனு தாக்கல்

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் சட்டமன்ற தொகுதி யில், தமிழக வெற்றி கழகம் சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் கவிதா.ஜி இராஜேந்திரன், ஜெயங் கொண்டம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் வட்டாட்சியருமான கா. ஆனந்தவேலிடம் அவர் தனது வேட்பு மனுவை வழங்கினார். இந்நிகழ்வில், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் சிங்கம் ராஜேஷ், மாவட்ட பொருளாளர் மார்டின் மரிய தோனி, மாவட்ட தகவல் […]

Continue Reading

அரியலுாரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அரியலூர் அண்ணா சிலை அருகில், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஏ ஐ டி யு.சி மாவட்ட பொதுச் செயலாளர் டி.தண்டபாணி – தொ.மு.ச மாவட்ட கவுன்சில் செயலாளர் பிவி அன்பழகன் – சி ஐடியூமாவட்ட செயலாளர் பி துரைசாமி – INTUC மாவட்ட பொதுச் செயலாளர் என் சௌந்தரராஜன் – HMS மாவட்ட தலைவர் எஸ் திருவள்ளுவர் – ஆகியோர் தலைமையேற்று , மத்திய அரசின் தொழிலாளர் […]

Continue Reading

அரியலூரில் அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

அரியலூர், ஏப். 1: அரியலூர் நகராட்சிக்குட்பட்ட வ.உ.சி. தெருவில், அதிமுக சார்பில் போட்டியிடும் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தாமரை எஸ். இராஜேந்திரன், பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வில், அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், முன்னாள் அரசு தலைமை கொறடாவாகவும் உள்ள அவர், வீட்டுக்கு வீடு சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது பொதுமக்கள் அவரை வரவேற்று, அவரின் தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த வாக்கு சேகரிப்பு […]

Continue Reading

அரியலூர்-குணமங்கலத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல்: கடைக்காரர் கைது

  விக்கிரமங்கலம், மார்ச் 31: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் குணமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர். அப்போது குணமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (30) என்பவரது பெட்டிக்கடையில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. […]

Continue Reading

அரியலூர் – குணமங்கலத்தில் சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

விக்கிரமங்கலம், மார்ச் 31 – அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது சட்டவிரோத மது விற்பனை சம்பவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது விற்பனை நடைபெறுகிறது என்ற ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து குணமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜம் (53) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் போது, வீட்டின் பின்புறத்தில் விற்பனைக்காக மறைத்து […]

Continue Reading

அரியலூர் – விக்கிரமங்கலத்தில் மாட்டு வண்டியில் மணல் கடத்தல்: வண்டி பறிமுதல், ஓட்டுநர் தப்பி ஓட்டம்

விக்கிரமங்கலம், மார்ச் 31: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையில் போலீசார் பெரிய திருக்கோணம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இடையத்தான்குடி சாலையிலிருந்து பெரிய திருக்கோணம் நோக்கி வந்த மாட்டு வண்டியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். இதைக் கண்ட மாட்டு வண்டி ஓட்டுநர், வண்டியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் போலீசார் மாட்டு வண்டியை சோதனை செய்ததில், மருதையாறு படுகை பகுதிகளில் இருந்து பெரிய […]

Continue Reading

அரியலூரில் திராவிடர் கழகம் சார்பில் பட்டுக்கோட்டை அழகிரியின் 77வது நினைவு நாள் பரப்புரை கூட்டம்

அரியலூரில் திராவிடர் கழகம் சார்பில் பட்டுக்கோட்டை அழகிரியின் 77 வது நினைவு நாள் பரப்புரை கூட்டம். அரியலூர் அண்ணா சிலை அருகே,திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி அஞ்சான் அஞ்சான் பட்டுக்கோட்டை அழகிரியின் 77வது நினைவு நாளை முன்னிட்டு, பரப்புரை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு அரியலூர் திராவிடர் கழக ஒன்றிய தலைவர் சி சிவக்கொழுந்து தலைமை தாங்கினார்.பரப்புரைக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.ஜி. மணிகண்டன்வரவேற்றார்.திராவிட கழக மாவட்ட இளைஞரணி […]

Continue Reading