நாகையில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

செய்தியாளர் :விஜய் நாகப்பட்டினம், ஜூலை 26: நாகப்பட்டினம் அபிராமி அம்மன் சன்னதி திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவர் நலன் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முகம்மது குத்புதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பகுருதீன் வரவேற்றார். மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அபுகாசிம், தொழிற்சங்க மாவட்டத் தலைவர் ரபீக் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் முகம்மது யாமீன், மாவட்ட […]

Continue Reading

446 மனுக்கள்.. உடனடி நடவடிக்கைக்கு ஆட்சியர் உத்தரவு!

  செய்தியாளர் : விஜய் நாகப்பட்டினம், ஜூலை 13: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 446 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். […]

Continue Reading

நாகையில் சீனியர் பீச் வாலிபால் லீக்: வெற்றியாளர்களுக்கு எஸ்பி பரிசு

  நாகப்பட்டினம் பீச் வாலிபால் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சீனியர் பீச் வாலிபால் லீக் சேம்பியன்ஷிப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் 3 நாட்கள் நடைபெற்றன. அகாடமி தலைவர் மோகன்தாஸ் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 8 சீனியர் அணிகள் பங்கேற்று பலத்த போட்டியை வெளிப்படுத்தின. நிறைவு நாளில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பாலசந்திரா தலைமை வகித்து வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். போட்டியில் அபிதன்–கிளிண்டன் ஜோடி முதலிடம், ஹரிஸ்–அர்ஷத் […]

Continue Reading

போதைக்கு எதிராக ஒன்றிணைவோம்: நாகையில் விழிப்புணர்வு ஓட்டம்

செய்தியாளர் ; விஜய்   நாகப்பட்டினம், ஜூன் 26: நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவூரித்திடலில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ஜவாஹிருல்லா, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் த. லதா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமண்ய […]

Continue Reading

நாகை குப்பைக்கிடங்கில் பயங்கர தீ விபத்து – ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

நாகப்பட்டினம் நகராட்சியின் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. நாகப்பட்டினம் நகராட்சியின் 36 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மேலக்கோட்டை வாசல் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் சேமித்து வைக்கப்படுகின்றன. அங்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தனித்தனியாக தரம் பிரித்து வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாப்பாக சேமிக்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம் மதிப்பில் இரும்பு ஷெட் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை குப்பைக்கிடங்கு வளாகத்தில் சேகரித்து […]

Continue Reading

5.45 லட்சம் பணம், 13 பவுன் நகை கொள்ளை வழக்கில் மின்னல் வேகத்தில் நடவடிக்கை

நாகப்பட்டினம் நகர காவல் சரகத்திற்குட்பட்ட கடற்கரைச் சாலையில் வசித்து வரும் வில்சன் (60), தேவன் மகன், மரவாடி ரோடு, வேதநாயகன் செட்டி தெரு, நாகப்பட்டினம் என்பவரது வீட்டில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி ரூ.5 லட்சத்து 45 ஆயிரம் பணம் மற்றும் 13 பவுன் தங்க நகைகள் மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டதாக நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் […]

Continue Reading

EGS பிள்ளை கல்லூரியில் ஒலிம்பிக் மற்றும் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம் E.G.S. பிள்ளை கல்வி நிறுவனங்கள் கல்லூரியில் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சமூக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விளையாட்டின் முக்கியத்துவம், உடல்நலம், ஒழுக்கம் மற்றும் இளைஞர்கள் விளையாட்டில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, இணையவழி மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது, போதைப்பொருட்களின் தீமைகள் மற்றும் அவற்றை ஒழிப்பதில் இளைஞர்களின் பங்கு […]

Continue Reading

நாகை புதிய கடற்கரையில் யோகா பயிற்சி; மாணவர்கள் உற்சாக பங்கேற்பு

செய்தியாளர் :விஜய் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் மாவட்ட அரசு சித்த மருத்துவத் துறை சார்பில் யோகா பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. நாகப்பட்டினம் அருகே கருவேலங்கடை தூய மைக்கேல் அகாடமி பள்ளி மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினர். நிகழ்ச்சிக்கு அரசு போக்குவரத்து […]

Continue Reading

உலக யோகா தினம்: 600 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி

செய்தியாளர் : விஜய் உலக யோகா தினத்தை முன்னிட்டு நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் சிறப்பு யோகா நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி பல்வேறு யோகாசனங்களை செய்து யோகாவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளியின் ஆச்சாரியார் சுவாமி ராமகிருஷ்ணானந்தா அவர்கள் தலைமை தாங்கி, யோகா மனிதனின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த கலையாகும் என வலியுறுத்தினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு யோகா செய்வதால் உடலில் ஏற்படும் நன்மைகள், மனஅழுத்தம் […]

Continue Reading

தந்தையர் தின விழா கோலாகலம்: பெற்றோர்களுடன் குழந்தைகள் உற்சாக கொண்டாட்டம்

  செய்தியாளர் : விஜய் நாகப்பட்டினம் அருகே கருவேலங்கடையில் அமைந்துள்ள தூய மைக்கேல்ஸ் அகாடமி பள்ளி வளாகத்தில் தந்தையர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில், பெற்றோர்களுக்காக ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கிரிக்கெட், பந்துகள் சேகரித்தல் மற்றும் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை […]

Continue Reading