அரியலூரில் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்தக் கோரி முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

  அரியலூர்: அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரை நிரந்தரப்படுத்தக் கோரி, தமிழ்நாடு ஏஐடியுசி உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனம் சார்பில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அரியலூர் நகராட்சி ஏஐடியுசி சுகாதாரத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், அரியலூர் திருச்சி சாலையில் உள்ள அஞ்சல் அலுவலகம் மூலம் முதலமைச்சரின் முகவரிக்கு 90 அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டன. அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் 300-க்கும் […]

Continue Reading

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியில் மீண்டும் துரோகம்

காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் தங்க.தர்மராஜன் குற்றச்சாட்டு தூத்தூர்: கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி அறிவிப்பில் தமிழக அரசு 3-வது முறையாகவும் குளறுபடியான அறிவிப்பை வெளியிட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளதாக காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் தங்க.தர்மராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது தமிழக வெற்றி கழக தலைவர் தஞ்சை டெல்டா பகுதியில் விவசாயிகளின் அடையாளமான பச்சை […]

Continue Reading

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் தலைமை நிர்வாகியும் மாவட்ட வருவாய் அலுவலருமான பி.மணிராஜ் தலைமையில் நடைபெற்றது. தலைமை கரும்பு அலுவலர் (பொறுப்பு) ஜி.சுரேஷ் வரவேற்றார். கூட்டத்தில், கரும்பு டன்னுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.709.50 ஊக்கத்தொகையுடன் மொத்த கொள்முதல் விலை ரூ.4,000 ஆக உயர்ந்துள்ளதற்கு விவசாய சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். தற்போதைய சூழ்நிலையில் டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். […]

Continue Reading

அரியலூரில் சுதந்திர தின விழா: ரூ.3.13 கோடி நலத்திட்ட உதவிகள்

அரியலூர், அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சமாதானத்தின் அடையாளமாக புறாக்களைப் பறக்கவிட்ட மாவட்ட ஆட்சியர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 51 பயனாளிகளுக்கு ரூ.3.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக பணியாற்றிய 45 காவலர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 285 அரசு அலுவலர்களுக்கு […]

Continue Reading

துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா

விழாவையொட்டி சார் பதிவாளர் மகாராஜன், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை அடுத்து, சார் பதிவாளர் மகாராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அலுவலகப் பணியாளர்கள் பிரேமலதா, சுகந்தி, தீபிகா, பாலாஜி, சக்தி, முருகன், வேல்முருகன் மற்றும் பத்திர எழுத்தாளர்கள், உதவியாளர்கள் மணி, சுதாகர், சுரேஷ், சின்னராசு, சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   <b> […]

Continue Reading

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா

வட்டாட்சியர் சித்ரா தேசியக் கொடியேற்றி மரியாதை துறையூர்: நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசு அலுவலகங்களிலும் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் துறையூர் வட்டாட்சியர் சித்ரா கலந்து கொண்டு, அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவின் சுதந்திரத்திற்காக […]

Continue Reading

உடையார்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மக்கள் சந்திப்பு நடைபயணம்

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து பிரசாரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் மக்கள் சந்திப்பு மற்றும் பரப்புரை இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட உடையார்பாளையம் நகரில் மக்கள் சந்திப்பு நடைபயணம் நடைபெற்றது. இதையொட்டி, உடையார்பாளையம் கடைவீதியில் இருந்து தொடங்கிய நடைபயணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாகவும், […]

Continue Reading

காவிரி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: பாலகிருஷ்ணன்

நாகப்பட்டினம்: காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிதியளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு […]

Continue Reading

துறையூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருச்சி மாவட்டம், துறையூர் அருகே காளிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துறையூர் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணி, திருச்சி சாலை, அண்ணா பேருந்து நிலையம் மற்றும் காவல் நிலையம் வழியாக சென்று நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து […]

Continue Reading

வேளாங்கண்ணி, செருதூரில் கடலரிப்பு தடுப்பு மற்றும் கரை பாதுகாப்புப் பணிகள்

செய்தியாளர் : விஜய் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் நேரில் ஆய்வு நாகப்பட்டினம், ஆக.12: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் நடைபெற்று வரும் கடலரிப்பு தடுப்புப் பணிகள் மற்றும் செருதூர் வெள்ளையாறு முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் கரை பாதுகாப்புச் சுவர் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேளாங்கண்ணி பகுதியில் சுமார் 1,500 மீனவர்கள் வசித்து வருகின்றனர். சுமார் 150 மீன்பிடி படகுகளைக் கொண்டு மீன்பிடித் தொழிலில் […]

Continue Reading