காவிரியில் தண்ணீர் இன்றி வறண்ட நிலை: திருவானைக்காவல் தெப்பக்குளத்தில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பு

திருச்சி, ஆக. 1: கர்நாடகா அரசு, காவிரி நீர்ப் பங்கீட்டின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை இதுவரை திறந்துவிடாததால், மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு நீர் திறக்கப்படவில்லை. இதன் விளைவாக திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்து, பல இடங்களில் ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டால், ஆடி மாதத்தில் காவிரி ஆறு முழுவதும் நீர் […]

Continue Reading

திருச்சியில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரி தீக்கிரை – தீவைப்பா? விபத்தா? போலீஸ் விசாரணை

திருச்சி: திருச்சி மாநகரம் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான லாரி, சஞ்சீவி நகர் அருகே வாடாமல்லி தெருவில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், லாரி அருகே இருந்த கருவேலச் செடிகளில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அந்த தீ வேகமாக பரவி அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரியையும் சூழ்ந்ததால், லாரி முழுவதுமாக தீக்கிரையாகி சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், லாரி […]

Continue Reading

முசிறி அருகே கொடூர வறட்சி: குடங்களில் தண்ணீர் சுமந்து மரவள்ளியை காப்பாற்றும் விவசாயிகள் – கருகும் கரும்புத் தோட்டங்கள்!

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திற்குட்பட்ட மங்களம் அருகே அண்ணா நகர் பகுதியில் கடுமையான வறட்சி விவசாயத்தை கடுமையாக பாதித்துள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் எல் நினோ (El Niño) தாக்கத்தால் பருவமழை பொய்த்துப் போன நிலையில், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக சரிந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கு மற்றும் கரும்பு உள்ளிட்ட முக்கியப் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் சாகுபடி செய்யப்பட்ட வருடப் பயிர்கள் கண்முன்னே காய்ந்து வருவதால், அப்பகுதி விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். […]

Continue Reading

34 கிலோ எடையில் $100 மில்லியன் மதிப்புள்ள முத்து! 10 ஆண்டுகள் கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த பிலிப்பைன்ஸ் மீனவர்

  ஓர் வியப்பூட்டும் உண்மைச் சம்பவம்! உலகிலேயே கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய இயற்கை முத்துகளில் ஒன்று, சுமார் 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் ஒரு சாதாரண மரக்கட்டிலின் அடியில் ஒளிந்திருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த இந்த சுவாரசியமான உண்மைச் சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியது. ### நங்கூரத்தில் சிக்கிய அதிர்ஷ்டம்! பிலிப்பைன்ஸ் நாட்டின் பாலவன் (Palawan) தீவுப் பகுதியைச் சேர்ந்த ஏழை மீனவர் ஒருவர், கடந்த 2006-ஆம் ஆண்டு வழக்கம்போல் கடலில் மீன்பிடிக்கச் […]

Continue Reading

திருச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி: மேயர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

செய்தியாளர்:அருண் 90959-25936   திருச்சி, ஜூலை 29: திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் திருச்சி மாநகராட்சி கட்டுமான பொறியாளர்கள் சங்கம் இணைந்து, அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை புதன்கிழமை நடத்தினர். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் அன்பழகன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில், கட்டுமான பொறியாளர்கள் சங்கத் தலைவர் […]

Continue Reading

முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமைத்து போராட்டம் நடத்திய கிராம மக்கள்

செய்தியாளர்:அருண் 90959-25936 திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வெள்ளூர் செல்லாயி கோவில் மேடு பகுதியில் புதிய கோழிப்பண்ணை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி கிராம மக்கள் கோட்டாட்சியர் (சப்-கலெக்டர்) அலுவலக வளாகத்தில் சமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளூர் செல்லாயி கோவில் மேடு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் புதிய கோழிப்பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கடும் துர்நாற்றம், சுகாதாரக் கேடு […]

Continue Reading

திருச்சியில் வீட்டு காவலில் விவசாயி அய்யாக்கண்ணு; பேச்சுவார்த்தைக்கு பின் சென்னை செல்ல அனுமதி

செய்தியாளர் : அருண் 90959 25936 விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திட்டமிடப்பட்டிருந்தது. விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட மறுத்துவரும் கர்நாடக அரசிடம் ரூ.1 லட்சம் கோடி இழப்பீடு கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர […]

Continue Reading

திருச்சி காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்

செய்தியாளர் : அருண் : 90959 25936  திருச்சி நகரின் முக்கிய புனித நீராடும் தலமான அம்மா மண்டபம் அருகே காவிரி ஆற்றில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு நீர் திறக்கப்படாததால், திருச்சி பகுதிக்கு வரும் நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. தற்போது குடிநீர் தேவைக்காக மட்டுமே அவ்வப்போது குறைந்தளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், காவிரி ஆற்றின் பல […]

Continue Reading

திருச்சியில் சாலையோர வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருச்சி திருச்சி மாநகர் மாவட்ட தரைக்கடை மற்றும் சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், நீதிமன்ற உத்தரவின்படி சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறும் உள்ளாட்சி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். காவல்துறை, […]

Continue Reading

திருச்சி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை

திருச்சி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை… சிகிச்சையில் இருந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை கடித்துக் குதறிய எலிகள் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காரணமா ? திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி தமிழ்க்கொடி (வயது 68). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் எதிர்பாராதவிதமாகத் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருடைய கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு தலைமை […]

Continue Reading