அன்னதான நிகழ்வில் அவதி: துணை சபாநாயகர் தாமதத்தால் வெயிலில் வாடிய மக்கள்!

திருச்சி, ஜூன் 24: திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட பாலக்கரை பகுதியில் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.   காலை 10 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு துணை சபாநாயகர் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததால், காலை முதலே காத்திருந்த பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் கடும் வெயிலில் அவதிப்பட்டனர். நீண்ட நேரம் நிற்க […]

Continue Reading

திருச்சி அரசு செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பு: மருந்து தரக்குறைபாடே காரணமா? விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

  திருச்சி, ஜூன் 3: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அவருக்கு செலுத்தப்பட்ட டெக்ஸாமெதாசோன் (Dexamethasone) மருந்தின் தரக்குறைபாடு உயிரிழப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம் என விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி அரசு செவிலியர் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த 20 வயதுடைய சீதாலட்சுமி, மூக்கடைப்பு பிரச்சினைக்காக கடந்த மே 22-ம் தேதி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை […]

Continue Reading

டாஸ்மாக் பணியாளர்கள் மனஉளைச்சலுடன் பணியாற்றுகின்றனர் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க கோரி மனு

திருச்சி, மே 20:   திருச்சி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு நிர்வாகிகள் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் டாஸ்மாக் திருச்சி மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை மூட தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு உடனடியாக […]

Continue Reading

திருச்சி அருகே லாட்டரி விற்றவர் மற்றும் சூதாடிய 4 பேர் கைது

திருச்சி, மே. 2- திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி எண்களை துண்டு சீட்டில் எழுதி விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரைப் பிடித்தனர். விசாரணையில் அவர் ஸ்ரீரங்கம் தாலுகா, வயலூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த அக்பர் அலி (வயது 49) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 35 லாட்டரி எண்கள் எழுதப்பட்ட சீட்டுகள் மற்றும் ரூ. 2,250 ரொக்கப் பணத்தை […]

Continue Reading

திருச்சி அருகே கஞ்சா மற்றும் புகையிலை விற்ற 3 பேர் கைது

திருச்சி, மே. 2- திருச்சி ராம்ஜிநகர் போலீசார் ராம்ஜிநகர் பிள்ளையார் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண்ணைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ராம்ஜிநகர் மில் காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி (வயது 60) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 55 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல், திருச்சி நவல்ப்பட்டு மற்றும் மணிகண்டம் பகுதிகளில் போலீசார் நடத்திய […]

Continue Reading

திருச்சி அருகே கார் மோதி லாரி டிரைவர் உடல் நசுங்கி பலி

திருச்சி, மே. 2- நாமக்கல் மாவட்டம் முட்டாஞ்செட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 59). லாரி டிரைவரான இவர், தனது லாரியில் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். பெட்டவாய்த்தலை அருகே வந்தபோது, சாலையோரம் லாரியை நிறுத்தினார். பின்னர் அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக பழனியப்பன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய பழனியப்பன், ரத்த வெள்ளத்தில் […]

Continue Reading

திருச்சி வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

  வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்: வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ காணொளி மூலம் விளக்க உரையாற்றினார் . கூட்டத்திற்கு தலைமை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி ! திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் (04/05/26 )அன்று வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முக்கிய பங்கேற்பாளர்கள்: இக்கூட்டத்தில் […]

Continue Reading

தொட்டியம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்: தலைவராக வி.ஆர். கார்த்திக் தேர்வு

  தொட்டியம், ஏப். 30: திருச்சி மாவட்டம் தொட்டியம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2026–2027ஆம் ஆண்டிற்கான நிர்வாகக் குழுத் தேர்தல் இன்று நடைபெற்றது. தேர்தலில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகளின்படி, சங்கத்தின் தலைவராக வி.ஆர். கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக பெரிய. பார்த்திபன், மகளிருக்கான துணைத் தலைவராக ஜி. துர்காதேவி ஆகியோர் பொறுப்பேற்றனர். மேலும், செயலாளராக ஏ. அண்ணாதுரை தேர்வு செய்யப்பட்ட நிலையில், இணைச் செயலாளராக ஜி. பிரசாந்த் மற்றும் மகளிருக்கான இணைச் செயலாளராக […]

Continue Reading

புள்ளம்பாடி அருகே நெற்கொள்முதல் நிலைய அலட்சியம் -சாலையில் குவிந்த நெல் மூட்டைகள்

  செய்தியாளர் சுபாஷ் செல்வம் திருச்சி மாவட்டம், புல்லம்பாடி அருகே உள்ள ஆலம்பாடி மேட்டூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நேரடி நெற்கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை அரசு நேரடி நெற்கொள்முதல் நிலையத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நெற்கொள்முதல் நிலைய வளாகத்தில் போதிய இடவசதி இருந்தும், நெல் மூட்டைகள் சாலையோரங்களில் அடுக்கி […]

Continue Reading

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு

  தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நத்தமாடிப்பட்டி கிராமமக்கள் போராட்டம்.     திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நத்தமாடிப்பட்டி மற்றும் கீழக்குறிச்சி கிராமங்களில், நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கையகப்படுத்தப்படும் நிலங்கள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் என்பதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என நத்தமாடி கிராம விவசாயிகள் அஞ்சுகின்றனர். விமான நிலைய விரிவாக்கத்திற்காக நத்தமாடிப்பட்டி […]

Continue Reading