பெரம்பலூரில் NDA கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழக அரசை கடுமையாக விமர்சித்த அதிமுக

தமிழக அரசின் செயல்பாடுகளை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சிகளின் சார்பில் பெரம்பலூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) முன்னிலை வகித்தது. பெரம்பலூர் நகரின் முக்கிய பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கண்டனம் தெரிவித்து கோஷங்கள் […]

Continue Reading

திருச்சி: திருவெறும்பூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சம் பறிமுதல்

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், போலீசாரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் மஞ்சத்திடல் பாலம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவரிடம் கணக்கில் வராத ரூ. 2 லட்சம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை […]

Continue Reading

திருச்சி: லால்குடி அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 16: 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறின்றி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது திருச்சிராப்பள்ளி மாவட்டம், 143-லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லால்குடி வட்டம், கள்ளக்குடி கிராம எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் […]

Continue Reading

பெரம்பலூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 2 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் இன்று காலை 7மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையான கண்காணிப்புக் குழு 7 ரம்யா – சி எஸ் ஆர் தலைமையிலான குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 2 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். பரவாயிலிருந்து தொண்டமாந்துறை நோக்கி சென்ற ford கார் வாகனத்தில் தொண்டமாந்துறையைச் சேர்ந்த அசோக் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் […]

Continue Reading

துறையூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து முழக்கம்

துறையூர் | மார்ச் 15, 2026 திருச்சி மாவட்டம் துறையூரில், சமையல் எரிவாயு (சிலிண்டர்) தட்டுப்பாட்டைக் கண்டித்தும், அதனைச் சீர்செய்யத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது நிலவி வரும் வளைகுடா போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் உள்ளூரிலும் எதிரொலிப்பதன் விளைவாக, துறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் […]

Continue Reading

பெரம்பலூர்: வரலாற்றுச் சிறப்புமிக்க புத்த, சமணச் சிலைகளைப் பாதுகாக்க அரசுக்குக் கோரிக்கை

  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தர் மற்றும் சமணச் சிலைகளை அரசு அங்கீகரித்து, அவற்றைச் சுற்றுலாத் தலங்களாக அறிவிக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதையும் நிலையில் வரலாற்றுச் சின்னங்கள்: பெரம்பலூர் மாவட்டம் பரவாய் மற்றும் ஒகளூர் பகுதிகளில் பழங்கால புத்தர் சிலைகள் அமைந்துள்ளன. அதேபோல், பெருமத்தூர் பகுதியில் சமண மதத்தைச் சார்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிலைகள் காணப்படுகின்றன. இந்தச் சிலைகள் அனைத்தும் பல நூற்றாண்டுகள் பழமையானவை என்பதோடு, இப்பகுதியின் பண்பாட்டு […]

Continue Reading

அரியலூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி – மாவட்ட ஆட்சியர் விளக்கம்

    அரியலூர் மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற வதந்தி பரவியதைத் தொடர்ந்து, பல பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எரிபொருள் விநியோகம் தொடர்ந்து சீராக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களும் வழக்கம்போல திறந்து […]

Continue Reading

துறையூரில் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு

2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள மத்திய ரிசர்வ் படை மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து துறையூரில் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர். முசிறி சரக டிஎஸ் பி முத்துக்குமார் துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஓம் பிரகாஷ் மற்றும் முசிறி தொட்டியம் தா.பேட்டை உப்பிலியபுரம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் மத்திய ரிசர்வ் படையினர் 500க்கும் மேற்பட்டோர் துறையூர் காவல் நிலையத்தில் இருந்து திருச்சி […]

Continue Reading

துறையூர் அருகே எரகுடியில் அம்மா பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள எரகுடி பகுதியில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மைன்ஸ் எஸ். தங்கவேல் தலைமையிலிருந்து சுமார் 700 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்சோதி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், துறையூர் சட்டமன்ற தொகுதியில் வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் […]

Continue Reading

துறையூர் அருகே விளையாட்டு விபரீதமானது 13 வயது சிறுவன் உயிரிழப்பு – புலிவலம் போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நல்லவன்னிப்பட்டி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் செல்வம் (13) கரட்டாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதே பகுதியை சேர்ந்த திருவேங்கடம் என்பவரது மகன் பாரதி (15). இவர் நடுவலூர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய செல்வம் மற்றும் பாரதி ஆகியோர் அதே பகுதியில் உள்ள விளையாட்டு திடலில் வாலிபால் விளையாடி […]

Continue Reading