காவிரியில் தண்ணீர் இன்றி வறண்ட நிலை: திருவானைக்காவல் தெப்பக்குளத்தில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பு

திருச்சி, ஆக. 1: கர்நாடகா அரசு, காவிரி நீர்ப் பங்கீட்டின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை இதுவரை திறந்துவிடாததால், மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு நீர் திறக்கப்படவில்லை. இதன் விளைவாக திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்து, பல இடங்களில் ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டால், ஆடி மாதத்தில் காவிரி ஆறு முழுவதும் நீர் […]

Continue Reading

காலி குடங்களுடன் அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்: நாகப்பட்டினம் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

செய்தியாளர் : விஜய் நாகப்பட்டினம், ஆக. 1: நாகப்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர நகர்மன்றக் கூட்டம், நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் 36 வார்டுகளைச் சேர்ந்த திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும், நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நீடித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் காலி குடங்களை ஏந்தியபடி கூட்டரங்கிற்குள் நுழைந்த அவர்கள், […]

Continue Reading

துறையூர் நகர்மன்றத்தில் பரபரப்பு… குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து திமுக வாக்அவுட்!

  செய்தியாளர்: அருண் 9095925936 திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம்  நகர்மன்றத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சியின் நிர்வாகம், வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தின் போது, துறையூர் நகராட்சி சார்பில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீருக்கான கட்டணம்  உயர்த்தப்பட்டிருப்பது குறித்து திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்றும், எந்தவித முன்னறிவிப்பும் […]

Continue Reading

32 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர்

செய்தியாளர் -அருண்: 9095925936 திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்த கொப்பம்பட்டியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகக் கட்டிடத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பொதுமக்கள் வருவாய்த்துறை சார்ந்த சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய அலுவலகம், அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் முக்கியமான திட்டமாக கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசின் நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக […]

Continue Reading

திருச்சியில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரி தீக்கிரை – தீவைப்பா? விபத்தா? போலீஸ் விசாரணை

திருச்சி: திருச்சி மாநகரம் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான லாரி, சஞ்சீவி நகர் அருகே வாடாமல்லி தெருவில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், லாரி அருகே இருந்த கருவேலச் செடிகளில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அந்த தீ வேகமாக பரவி அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரியையும் சூழ்ந்ததால், லாரி முழுவதுமாக தீக்கிரையாகி சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், லாரி […]

Continue Reading

முசிறி அருகே கொடூர வறட்சி: குடங்களில் தண்ணீர் சுமந்து மரவள்ளியை காப்பாற்றும் விவசாயிகள் – கருகும் கரும்புத் தோட்டங்கள்!

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திற்குட்பட்ட மங்களம் அருகே அண்ணா நகர் பகுதியில் கடுமையான வறட்சி விவசாயத்தை கடுமையாக பாதித்துள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் எல் நினோ (El Niño) தாக்கத்தால் பருவமழை பொய்த்துப் போன நிலையில், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக சரிந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கு மற்றும் கரும்பு உள்ளிட்ட முக்கியப் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் சாகுபடி செய்யப்பட்ட வருடப் பயிர்கள் கண்முன்னே காய்ந்து வருவதால், அப்பகுதி விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். […]

Continue Reading

இணையவழியில் போதைப்பொருள் விற்பனை — 3 பெண் ஆசிரியைகள் கைது!

  கோழிக்கோடு கேரள மாநிலத்தில் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக போதைப்பொருள் (MDMA) விற்பனையில் ஈடுபட்ட வழக்கில், அரசுப் பள்ளி அமைப்பைச் சேர்ந்த மூன்று பெண் ஆசிரியைகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நடந்த சம்பவம் என்ன? கேரள காவல்துறையினரின் போதைப்பொருள் எதிர்ப்புத் திட்டமான ஆப்பரேஷன் தூஃபான்’ (Operation Toofan) கீழ், வடகரா மற்றும் கோழிக்கோடு கிராமப்புறக் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது போதைப்பொருள் வாங்கிய நபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், […]

Continue Reading

34 கிலோ எடையில் $100 மில்லியன் மதிப்புள்ள முத்து! 10 ஆண்டுகள் கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த பிலிப்பைன்ஸ் மீனவர்

  ஓர் வியப்பூட்டும் உண்மைச் சம்பவம்! உலகிலேயே கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய இயற்கை முத்துகளில் ஒன்று, சுமார் 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் ஒரு சாதாரண மரக்கட்டிலின் அடியில் ஒளிந்திருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த இந்த சுவாரசியமான உண்மைச் சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியது. ### நங்கூரத்தில் சிக்கிய அதிர்ஷ்டம்! பிலிப்பைன்ஸ் நாட்டின் பாலவன் (Palawan) தீவுப் பகுதியைச் சேர்ந்த ஏழை மீனவர் ஒருவர், கடந்த 2006-ஆம் ஆண்டு வழக்கம்போல் கடலில் மீன்பிடிக்கச் […]

Continue Reading

திருச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி: மேயர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

செய்தியாளர்:அருண் 90959-25936   திருச்சி, ஜூலை 29: திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் திருச்சி மாநகராட்சி கட்டுமான பொறியாளர்கள் சங்கம் இணைந்து, அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை புதன்கிழமை நடத்தினர். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் அன்பழகன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில், கட்டுமான பொறியாளர்கள் சங்கத் தலைவர் […]

Continue Reading

முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமைத்து போராட்டம் நடத்திய கிராம மக்கள்

செய்தியாளர்:அருண் 90959-25936 திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வெள்ளூர் செல்லாயி கோவில் மேடு பகுதியில் புதிய கோழிப்பண்ணை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி கிராம மக்கள் கோட்டாட்சியர் (சப்-கலெக்டர்) அலுவலக வளாகத்தில் சமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளூர் செல்லாயி கோவில் மேடு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் புதிய கோழிப்பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கடும் துர்நாற்றம், சுகாதாரக் கேடு […]

Continue Reading