“60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டி மரண வலையில்… அச்சத்தில் கிருஷ்ணாபுரம் மக்கள்!”

    திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தற்போது மிகவும் சேதமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தினமும் குடிநீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தொட்டியின் தூண்கள் மற்றும் கட்டமைப்பில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், […]

Continue Reading

போதைக்கு எதிராக ஒன்றிணைவோம்: நாகையில் விழிப்புணர்வு ஓட்டம்

செய்தியாளர் ; விஜய்   நாகப்பட்டினம், ஜூன் 26: நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவூரித்திடலில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ஜவாஹிருல்லா, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் த. லதா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமண்ய […]

Continue Reading

காசோலை மோசடி வழக்கில் குற்றவாளிக்கு ஓராண்டு சிறை

  செய்தியாளர் : சுபாஷ் செல்வம்   அரியலூரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா தொடர்ந்த காசோலை மோசடி வழக்கில், தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த முகமது ரியாஸ் குற்றவாளி என அரியலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்–I தீர்ப்பளித்துள்ளது. வழக்கின் விவரப்படி, தனது தொழில் அபிவிருத்திக்காக முகமது ரியாஸ், ஷேக் அப்துல்லாவிடம் ரூ.3 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. கடனை திருப்பிச் செலுத்தும் நோக்கில் வழங்கப்பட்ட காசோலை, அரியலூரில் உள்ள வங்கியில் வசூலுக்காக சமர்ப்பிக்கப்பட்டபோது “Payment Stopped […]

Continue Reading

துறையூரில் நள்ளிரவில் சாலை மறியல் – 12 வயது சிறுமி மீது மின்சாரம் தாக்கியதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம், துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான “தாய்க்கோயில்” வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் மின்வேலியில் சிக்கி 12 வயது சிறுமி மின்சாரம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். துறையூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த நகர்மன்ற 2-வது வார்டு உறுப்பினர் நித்தியா, தனது 12 வயது மகள் லக்ஷனா மற்றும் தாயாருடன் வழக்கம்போல் நடைபயிற்சிக்குச் சென்றிருந்தார். அப்போது தாய்க்கோயில் வளாக நுழைவாயில் அருகே அமர்ந்திருந்த சிறுமி […]

Continue Reading

“போதை ஒழிப்பு – சாலை பாதுகாப்பு: மாணவர்களுக்கு விக்கிரமங்கலம் போலீசார் விழிப்புணர்வு!”

விக்கிரமங்கலம், ஜூன் 25: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசார், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குணமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்கள் சிறுவயதிலேயே புகையிலை மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், போதைப்பொருள் பழக்கத்தால் குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் தீமைகள் குறித்தும் […]

Continue Reading

அன்னதான நிகழ்வில் அவதி: துணை சபாநாயகர் தாமதத்தால் வெயிலில் வாடிய மக்கள்!

திருச்சி, ஜூன் 24: திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட பாலக்கரை பகுதியில் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.   காலை 10 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு துணை சபாநாயகர் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததால், காலை முதலே காத்திருந்த பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் கடும் வெயிலில் அவதிப்பட்டனர். நீண்ட நேரம் நிற்க […]

Continue Reading

கலிங்கமுடையான்பட்டி ஊராட்சியில் குடிநீர் பிரச்சனை தீவிரம் – பொதுமக்கள் வேதனை

செய்தியாளர் : அருண் 9095925936 திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கலிங்கமுடையான்பட்டி ஊராட்சி 1-வது வார்டு வைகறை பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கலிங்கமுடையான்பட்டி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் குடிநீர் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் சென்று எடுத்து வருவதாகவும், அந்த தண்ணீரும் உப்பு தண்ணீர் எனவும், தனியார் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றிலிருந்தும் தண்ணீர் எடுத்து […]

Continue Reading

நாகை குப்பைக்கிடங்கில் பயங்கர தீ விபத்து – ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

நாகப்பட்டினம் நகராட்சியின் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. நாகப்பட்டினம் நகராட்சியின் 36 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மேலக்கோட்டை வாசல் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் சேமித்து வைக்கப்படுகின்றன. அங்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தனித்தனியாக தரம் பிரித்து வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாப்பாக சேமிக்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம் மதிப்பில் இரும்பு ஷெட் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை குப்பைக்கிடங்கு வளாகத்தில் சேகரித்து […]

Continue Reading

5.45 லட்சம் பணம், 13 பவுன் நகை கொள்ளை வழக்கில் மின்னல் வேகத்தில் நடவடிக்கை

நாகப்பட்டினம் நகர காவல் சரகத்திற்குட்பட்ட கடற்கரைச் சாலையில் வசித்து வரும் வில்சன் (60), தேவன் மகன், மரவாடி ரோடு, வேதநாயகன் செட்டி தெரு, நாகப்பட்டினம் என்பவரது வீட்டில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி ரூ.5 லட்சத்து 45 ஆயிரம் பணம் மற்றும் 13 பவுன் தங்க நகைகள் மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டதாக நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் […]

Continue Reading

EGS பிள்ளை கல்லூரியில் ஒலிம்பிக் மற்றும் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம் E.G.S. பிள்ளை கல்வி நிறுவனங்கள் கல்லூரியில் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சமூக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விளையாட்டின் முக்கியத்துவம், உடல்நலம், ஒழுக்கம் மற்றும் இளைஞர்கள் விளையாட்டில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, இணையவழி மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது, போதைப்பொருட்களின் தீமைகள் மற்றும் அவற்றை ஒழிப்பதில் இளைஞர்களின் பங்கு […]

Continue Reading