5 நாட்களாக குடிநீர் இன்றி தவிக்கும் குடியிருப்புவாசிகள் – மாவட்ட ஆட்சியரிடம் வாட்ஸ்அப் மூலம் புகார்

செய்தியாளர்:வசந்த் பெரம்பலூர், ஜூலை 24: பெரம்பலூர் துறைமங்கலம் திட்டப் பகுதிக்குட்பட்ட கவுல் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இப்பிரச்சினை தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டிருந்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் […]

Continue Reading

துறையூரில் ரசாயன உர பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வு கண்காட்சி; விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கருத்தரங்கம்

திருச்சி மாவட்டம் துறையூரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) மற்றும் மாநில விரிவாக்கத் திட்டங்களில் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. வேளாண்மைத் துறையின் சார்பில் இயற்கை வேளாண்மைக்கு தேவையான இடுபொருட்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், அதிக முளைப்புத் திறன் கொண்ட விதைகள், இயற்கை உரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சாகுபடி முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், […]

Continue Reading

திருச்சி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை

திருச்சி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை… சிகிச்சையில் இருந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை கடித்துக் குதறிய எலிகள் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காரணமா ? திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி தமிழ்க்கொடி (வயது 68). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் எதிர்பாராதவிதமாகத் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருடைய கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு தலைமை […]

Continue Reading

கோட்டப்பாளையம் மகதலா மரியா திருத்தல பெருவிழா: பிரமாண்ட தேர் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

  திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கோட்டப்பாளையம் புனித மகதலா மரியா திருத்தலத்தின் ஆண்டு பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுமார் 50 அடி உயரமுள்ள பிரமாண்ட தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனியாக வந்தது. இதில் கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஜூலை 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில், தினமும் சிறப்பு திருப்பலி, சிறிய தேர் பவனி மற்றும் […]

Continue Reading

37 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – வாலிப நினைவுகளில் மூழ்கி மகிழ்ந்த நண்பர்கள்

திருச்சி மாவட்டம் துறையூரில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில், 1987 ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள், தங்களது வாலிபக் கால நண்பர்களையும் ஆசிரியர்களையும் சந்தித்து நெகிழ்ச்சியுடன் மகிழ்ந்தனர். பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வரும் முன்னாள் மாணவர்கள் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் சுமார் 150 […]

Continue Reading

446 மனுக்கள்.. உடனடி நடவடிக்கைக்கு ஆட்சியர் உத்தரவு!

  செய்தியாளர் : விஜய் நாகப்பட்டினம், ஜூலை 13: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 446 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். […]

Continue Reading

துறையூர் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய இளைஞர்கள் கைது

அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய இளைஞர்கள் கைது – துறையூர் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களிடையே பரபரப்பு திருச்சி மாவட்டம் துறையூர் அரசு பேருந்து பணிமனையில் பணிபுரியும் நடத்துநர் பன்னீர்செல்வம், வழக்கம்போல் இன்று துறையூர்–முசிறி வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பேருந்தில் பணியாற்றி வந்தார். அப்போது முசிறியிலிருந்து துறையூர் வழியாக வேங்கடத்தனூர் செல்லும் அரசு பேருந்தில் கீரம்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் துறையூரில் ஏறியதாக கூறப்படுகிறது. பேருந்தில் பயணித்தபோது, ஓட்டுநர் தன் மீது கை வைத்ததாக அந்த பெண் […]

Continue Reading

நாகையில் சீனியர் பீச் வாலிபால் லீக்: வெற்றியாளர்களுக்கு எஸ்பி பரிசு

  நாகப்பட்டினம் பீச் வாலிபால் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சீனியர் பீச் வாலிபால் லீக் சேம்பியன்ஷிப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் 3 நாட்கள் நடைபெற்றன. அகாடமி தலைவர் மோகன்தாஸ் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 8 சீனியர் அணிகள் பங்கேற்று பலத்த போட்டியை வெளிப்படுத்தின. நிறைவு நாளில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பாலசந்திரா தலைமை வகித்து வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். போட்டியில் அபிதன்–கிளிண்டன் ஜோடி முதலிடம், ஹரிஸ்–அர்ஷத் […]

Continue Reading

கலைஞர் 103வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்: துறையூரில் திமுக அரசின் சாதனைகளை விளக்கிய கே.என்.நேரு, கோவி.செழியன்

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் துறையூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் கோவி. செழியன் கலந்து கொண்டு திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கிப் பேசினர். கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, துறையூர் பகுதியின் வளர்ச்சிக்காக திமுக அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். ரூ.108 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் […]

Continue Reading

4 வருஷமா வெயிட்டிங்! உப்பிலியபுரம் அருகே அதிகாரிகளின் ‘ஆமை வேக’ சாதனை!

விண்வெளிக்குச் செல்லும் காலத்தில், 4 வருஷமா வெயிட்டிங்! உப்பிலியபுரம் அருகே அதிகாரிகளின் ‘ஆமை வேக’ சாதனை! “டிஜிட்டல் இந்தியா”, “வல்லரசு இந்தியா” என நாடே ஜெட் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்க, திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சபெருமாள்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குண்டுக்கல் கிராமத்திலோ அதிகாரிகள் ‘டைம் டிராவல்’ செய்து கற்காலத்திற்கே மக்களைக் கொண்டு சென்று சாதனை படைத்து வருகிறார்கள்! இப்பகுதி மக்களின் தாகம் தீர்க்க, 4 வருடங்களுக்கு முன்பு ஒரு ‘’ குடிநீர் தொட்டி பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. ஆனால், […]

Continue Reading