ஜெயங்கொண்டம் தொகுதி யில் தவெக வேட்பாளர் கவிதா.ஜி இராஜேந்திரன் வேட்பு மனு தாக்கல்

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் சட்டமன்ற தொகுதி யில், தமிழக வெற்றி கழகம் சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் கவிதா.ஜி இராஜேந்திரன், ஜெயங் கொண்டம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் வட்டாட்சியருமான கா. ஆனந்தவேலிடம் அவர் தனது வேட்பு மனுவை வழங்கினார். இந்நிகழ்வில், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் சிங்கம் ராஜேஷ், மாவட்ட பொருளாளர் மார்டின் மரிய தோனி, மாவட்ட தகவல் […]

Continue Reading

துறையூர் தொகுதியில் தவெக வேட்பாளர் ரவிசங்கர் வேட்புமனு தாக்கல்

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் தவெக கட்சியின் வேட்பாளராக திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரவிசங்கர் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ரவிசங்கர் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் துறையூர் பாலக்கரை பகுதியில் இருந்து மேளதாளம் முழங்க, விசில் சத்தத்துடன் உற்சாக ஊர்வலமாக புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி சென்றார். பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வு துறையூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் பிஜய்குமார்தாஸ், […]

Continue Reading

பெரம்பலூரில் அதிமுக வேட்பாளருக்கு நாயுடு கூட்டமைப்பு முழு ஆதரவு அறிவிப்பு

பெரம்பலூர், ஏப். 2: தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ரெங்கராஜ், பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட கழக செயலாளரும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வெற்றி வேட்பாளருமான இளம்பை. இரா. தமிழ்செல்வன் (MA, முன்னாள் எம்.எல்.ஏ) அவர்களை நேரில் சந்தித்தார். அப்போது, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பின் முழு ஆதரவும் அதிமுக வேட்பாளருக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாசலம், […]

Continue Reading

பங்குனி பௌர்ணமி விழா: சங்குபேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம்

பெரம்பலூர், ஏப். 2: பெரம்பலூர் நகரின் சங்குபேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டு, அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மாலை அணிவித்து மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் […]

Continue Reading

பெரம்பலூர்: தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் தேர்தல் ஆதரவு – ஏப்ரல் 12ல் அறிவிப்பு

பெரம்பலூர், ஏப். 1: பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் வசித்து வரும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து ஏப்ரல் 12ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், பெரம்பலூர் தொகுதியில் சுமார் 45,000 தேவேந்திரகுல வேளாளர் வாக்காளர்கள் உள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளாக மற்றும் ஆகிய முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது சமூகத்தினருக்கு உரிய அரசியல் […]

Continue Reading

அரியலுாரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அரியலூர் அண்ணா சிலை அருகில், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஏ ஐ டி யு.சி மாவட்ட பொதுச் செயலாளர் டி.தண்டபாணி – தொ.மு.ச மாவட்ட கவுன்சில் செயலாளர் பிவி அன்பழகன் – சி ஐடியூமாவட்ட செயலாளர் பி துரைசாமி – INTUC மாவட்ட பொதுச் செயலாளர் என் சௌந்தரராஜன் – HMS மாவட்ட தலைவர் எஸ் திருவள்ளுவர் – ஆகியோர் தலைமையேற்று , மத்திய அரசின் தொழிலாளர் […]

Continue Reading

துறையூர் அருகே நேரு நினைவுக் கல்லூரியில் XR & DT புதிய பாடத்திட்டம் அறிமுகம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புத்தனாம்பட்டியில் செயல்பட்டு வரும் நேரு நினைவுக் கல்லூரியில், உலகளாவிய முக்கியத்துவம் பெற்ற எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி (XR) மற்றும் டிஜிட்டல் ட்வின் (DT) தொடர்பான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய பாடத்திட்டம், எதிர்காலத்தில் வேகமாக வளர்ச்சி அடையும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைக்கு துணைபுரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்துறை நிறுவனங்களில் XR மற்றும் DT தொடர்பான திறன்களுக்கு அதிகமான தேவை உருவாகி வருவதால், கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு இது புதிய வாய்ப்புகளை […]

Continue Reading

அரியலூரில் அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

அரியலூர், ஏப். 1: அரியலூர் நகராட்சிக்குட்பட்ட வ.உ.சி. தெருவில், அதிமுக சார்பில் போட்டியிடும் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தாமரை எஸ். இராஜேந்திரன், பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வில், அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், முன்னாள் அரசு தலைமை கொறடாவாகவும் உள்ள அவர், வீட்டுக்கு வீடு சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது பொதுமக்கள் அவரை வரவேற்று, அவரின் தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த வாக்கு சேகரிப்பு […]

Continue Reading

அரியலூர்-குணமங்கலத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல்: கடைக்காரர் கைது

  விக்கிரமங்கலம், மார்ச் 31: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் குணமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர். அப்போது குணமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (30) என்பவரது பெட்டிக்கடையில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. […]

Continue Reading

அரியலூர் – குணமங்கலத்தில் சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

விக்கிரமங்கலம், மார்ச் 31 – அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது சட்டவிரோத மது விற்பனை சம்பவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது விற்பனை நடைபெறுகிறது என்ற ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து குணமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜம் (53) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் போது, வீட்டின் பின்புறத்தில் விற்பனைக்காக மறைத்து […]

Continue Reading