வாக்குறுதி கொடுத்த அரசு எங்கே? – துறையூரில் விவசாயிகள் கண்டனக் குரல்!

கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்; 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சோபனபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, சிறு மற்றும் குறு விவசாயிகளின் அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்யவும், பெரிய விவசாயிகளின் கடனில் 50 சதவீதம் […]

Continue Reading

துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை திருச்சி மாவட்டம் துறையூரில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் (பத்திரப்பதிவு) அலுவலகத்தில் இன்று திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில்லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், பத்திரப்பதிவு பணிகளுக்காக நிலத் தரகர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம் அளவுக்கு அதிகமாக லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்திருந்ததாக கூறப்படுகிறது. […]

Continue Reading

துறையூரில் தீயணைப்பு துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

துறையூர், ஜூன் 3: தமிழ்நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் பொதுமக்களுக்கான தீயணைப்பு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன்படி, வருகின்ற ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை “வாருங்கள் கற்றுக் கொள்வோம்” என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தீ விபத்துகள், சாலை […]

Continue Reading

விலை அதிகம் : ஆக்ஷன் அதிகம்! துறையூரில் துணை சபாநாயகரின் அதிரடி ஆட்டம்

திருச்சி மாவட்டம் துறையூரில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான மனமகிழ் மன்றத்தில், விதிமுறைகள் மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கடைகள் திறக்கப்படாத நிலையில், துறையூர் பகுதியில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், தமிழக அரசு 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபான பாட்டில்கள் விற்பனை […]

Continue Reading

பள்ளி வாகனங்கள் ‘பிட்’டாக இருக்கிறதா? துறையூரில் சார்-ஆட்சியர் அதிரடி ஆய்வு!

திருச்சி மாவட்டம் துறையூர் மோட்டார் வாகன அலுவலகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், துறையூர் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை முசிறி சார்-ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் பாபு முன்னிலையில் நடத்தினர். ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டகம், தீயணைப்பு கருவி, அவசர வெளியேறும் கதவு, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் முறையாக செயல்படுகிறதா என பரிசோதிக்கப்பட்டது. மேலும், […]

Continue Reading

நீங்களெல்லாம் ஒரு அதிகாரியாக துணை சபாநாயகர் ரவிசங்கர் அதிரடி

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிக பேருந்து நிலையம் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் செயல்பட்டு வருகிறது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பேருந்துக்காக நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் வெளியூர் செல்ல வந்த பெண் […]

Continue Reading

துறையூரில் துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

பேருந்து நிலையப் பகுதியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்… திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கருக்கு துறையூரில் உற்சாக வரவேற்பு அளித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர், துறையூர் ரவுண்டானா முசிறி பிரிவு ரோடு பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று பேருந்து நிலைய பகுதியிலுள்ள அண்ணா சிலைக்கு துணை சபாநாயகர் ரவிசங்கர் மாலை அணிவித்தார், […]

Continue Reading

திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் யோகநாதன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை !

  திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றிய நகர அதிமுக சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் யோகநாதன் தலைமையில் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட செயலாளர் யோகநாதன் உப்பிலியாபுரம் துறையூர் பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஒன்றிய நகரக் கழக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று அண்ணா பேருந்து நிலையத்தில் அண்ணா சிலைக்கு மாலை […]

Continue Reading

புளியஞ்சோலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கோடை வெப்பத்தை தணிக்க குடும்பத்துடன் உற்சாக குளியல்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள இயற்கை எழில் கொஞ்சும் புளியஞ்சோலைசுற்றுலாத் தலம், தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு களைகட்டத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு திரண்டு வருவதால், இப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது குடும்பங்களுடன் சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள புளியஞ்சோலைக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான […]

Continue Reading

துறையூரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு போதிய அறிவிப்பின்றி பயணிகள் அவதி

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று தற்காலிக பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதையொட்டி, பேருந்துகளின் புதிய வழித்தடங்கள் மற்றும் நிறுத்துமிடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே முறையான அறிவிப்பு வழங்காததால் வெளியூரிலிருந்து வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். காலை நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு […]

Continue Reading