துறையூரில் ரசாயன உர பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வு கண்காட்சி; விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கருத்தரங்கம்

திருச்சி மாவட்டம் துறையூரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) மற்றும் மாநில விரிவாக்கத் திட்டங்களில் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. வேளாண்மைத் துறையின் சார்பில் இயற்கை வேளாண்மைக்கு தேவையான இடுபொருட்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், அதிக முளைப்புத் திறன் கொண்ட விதைகள், இயற்கை உரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சாகுபடி முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், […]

Continue Reading

கோட்டப்பாளையம் மகதலா மரியா திருத்தல பெருவிழா: பிரமாண்ட தேர் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

  திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கோட்டப்பாளையம் புனித மகதலா மரியா திருத்தலத்தின் ஆண்டு பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுமார் 50 அடி உயரமுள்ள பிரமாண்ட தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனியாக வந்தது. இதில் கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஜூலை 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில், தினமும் சிறப்பு திருப்பலி, சிறிய தேர் பவனி மற்றும் […]

Continue Reading

37 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – வாலிப நினைவுகளில் மூழ்கி மகிழ்ந்த நண்பர்கள்

திருச்சி மாவட்டம் துறையூரில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில், 1987 ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள், தங்களது வாலிபக் கால நண்பர்களையும் ஆசிரியர்களையும் சந்தித்து நெகிழ்ச்சியுடன் மகிழ்ந்தனர். பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வரும் முன்னாள் மாணவர்கள் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் சுமார் 150 […]

Continue Reading

துறையூர் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய இளைஞர்கள் கைது

அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய இளைஞர்கள் கைது – துறையூர் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களிடையே பரபரப்பு திருச்சி மாவட்டம் துறையூர் அரசு பேருந்து பணிமனையில் பணிபுரியும் நடத்துநர் பன்னீர்செல்வம், வழக்கம்போல் இன்று துறையூர்–முசிறி வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பேருந்தில் பணியாற்றி வந்தார். அப்போது முசிறியிலிருந்து துறையூர் வழியாக வேங்கடத்தனூர் செல்லும் அரசு பேருந்தில் கீரம்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் துறையூரில் ஏறியதாக கூறப்படுகிறது. பேருந்தில் பயணித்தபோது, ஓட்டுநர் தன் மீது கை வைத்ததாக அந்த பெண் […]

Continue Reading

கலைஞர் 103வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்: துறையூரில் திமுக அரசின் சாதனைகளை விளக்கிய கே.என்.நேரு, கோவி.செழியன்

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் துறையூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் கோவி. செழியன் கலந்து கொண்டு திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கிப் பேசினர். கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, துறையூர் பகுதியின் வளர்ச்சிக்காக திமுக அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். ரூ.108 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் […]

Continue Reading

4 வருஷமா வெயிட்டிங்! உப்பிலியபுரம் அருகே அதிகாரிகளின் ‘ஆமை வேக’ சாதனை!

விண்வெளிக்குச் செல்லும் காலத்தில், 4 வருஷமா வெயிட்டிங்! உப்பிலியபுரம் அருகே அதிகாரிகளின் ‘ஆமை வேக’ சாதனை! “டிஜிட்டல் இந்தியா”, “வல்லரசு இந்தியா” என நாடே ஜெட் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்க, திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சபெருமாள்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குண்டுக்கல் கிராமத்திலோ அதிகாரிகள் ‘டைம் டிராவல்’ செய்து கற்காலத்திற்கே மக்களைக் கொண்டு சென்று சாதனை படைத்து வருகிறார்கள்! இப்பகுதி மக்களின் தாகம் தீர்க்க, 4 வருடங்களுக்கு முன்பு ஒரு ‘’ குடிநீர் தொட்டி பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. ஆனால், […]

Continue Reading

“60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டி மரண வலையில்… அச்சத்தில் கிருஷ்ணாபுரம் மக்கள்!”

    திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தற்போது மிகவும் சேதமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தினமும் குடிநீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தொட்டியின் தூண்கள் மற்றும் கட்டமைப்பில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், […]

Continue Reading

துறையூரில் நள்ளிரவில் சாலை மறியல் – 12 வயது சிறுமி மீது மின்சாரம் தாக்கியதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம், துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான “தாய்க்கோயில்” வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் மின்வேலியில் சிக்கி 12 வயது சிறுமி மின்சாரம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். துறையூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த நகர்மன்ற 2-வது வார்டு உறுப்பினர் நித்தியா, தனது 12 வயது மகள் லக்ஷனா மற்றும் தாயாருடன் வழக்கம்போல் நடைபயிற்சிக்குச் சென்றிருந்தார். அப்போது தாய்க்கோயில் வளாக நுழைவாயில் அருகே அமர்ந்திருந்த சிறுமி […]

Continue Reading

கலிங்கமுடையான்பட்டி ஊராட்சியில் குடிநீர் பிரச்சனை தீவிரம் – பொதுமக்கள் வேதனை

செய்தியாளர் : அருண் 9095925936 திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கலிங்கமுடையான்பட்டி ஊராட்சி 1-வது வார்டு வைகறை பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கலிங்கமுடையான்பட்டி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் குடிநீர் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் சென்று எடுத்து வருவதாகவும், அந்த தண்ணீரும் உப்பு தண்ணீர் எனவும், தனியார் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றிலிருந்தும் தண்ணீர் எடுத்து […]

Continue Reading

முதல்வர் விஜய் பிறந்தநாளில் மனிதநேயம் மலர்ந்தது: ரத்ததான முகாமை தொடங்கி வைத்த துணை சபாநாயகர் ரவிசங்கர்

செய்தியாளர் : அருண் – 90959 25936 திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு சமூகநலத் திட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டதுடன், துறையூர் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமும் நடைபெற்றது. இந்த முகாமை துணை சபாநாயகர் ரவிசங்கர் தொடங்கி வைத்து, ரத்ததானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மருத்துவ முகாமில் பங்கேற்ற 11 […]

Continue Reading