எம்.எல்.ஏவுக்கு எதிரான போஸ்டர் அல்ல, தொண்டனின் ஆதங்கம்!” – நாகையில் பரபரப்புக்கு பின் திமுக நிர்வாகி விளக்கம்

  செய்தியாளர் : விஜய் நாகையில் ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சை குறித்து, “இது எம்.எல்.ஏவுக்கு எதிரான போஸ்டர் அல்ல; திமுக தொண்டனின் ஆதங்கம் மட்டுமே” என்று திமுக நிர்வாகி ஏ.கே.எஸ்.முருகன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். ### பின்னணி என்ன? கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, நாகப்பட்டினம் தொகுதியில் திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று உள்ளூர் நிர்வாகிகள் தலைமைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று, திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா உதயசூரியன் […]

Continue Reading

பெரம்பலூரில் விசிக – திமுகவினர் மோதல்: கற்கள் வீச்சால் பரபரப்பு

செய்தியாளர் : சுபாஷ் செல்வம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் விசிக மற்றும் திமுக கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மீது கற்கள் மற்றும் கட்டைகளை வீசி தாக்கிக் கொண்ட சம்பவம் காரணமாக பதற்றமான சூழல் நிலவியது. தவக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்த விசிக கட்சிக்கு, சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து […]

Continue Reading

கடன் தள்ளுபடியில் முதல்வர் விஜய் தனிக்கவனம் செலுத்த தவறி விட்டார் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்கசண்முகசுந்தரம்

கடன் தள்ளுபடியில் முதல்வர் விஜய் தனிக்கவனம் செலுத்த தவறி விட்டார் சட்டசபையை கூட்டி சிறப்புத் தீர்மானம் கொண்டு வாருங்கள் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் வேண்டுகோள் இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டல் படி 45 நாள் முதல் 60 நாட்களுக்குள் தள்ளுபடி செய்த தொகையை கூட்டுறவு வங்கிகளில் செலுத்த வேண்டும் என கறுகிறது என தமிழக அரசு செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் […]

Continue Reading

நாகூர் அருகே 3 மணி நேரமாக சாலை மறியல்: ஸ்தம்பித்த கிழக்கு கடற்கரைச் சாலை

செய்தியாளர் : விஜய் நாகூர் அடுத்த வாஞ்சூர் சோதனைச் சாவடி அருகே, சிபிசிஎல் ஆலை விரிவாக்கத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை – தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. நாகை மாவட்டம் பனங்குடி பகுதியில் அமைந்துள்ள சிபிசிஎல் (CPCL) ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக முட்டம், கோபுராஜபுரம், பனங்குடி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இருந்து சுமார் […]

Continue Reading

டாஸ்மாக் கடை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகை

  செய்தியாளர் : பாலசுப்பிரமணியம்   செந்துறை அருகே படைவெட்டி குடிக்காட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 6483-ஐ உடனடியாக மூடக்கோரி மக்கள் காவலர் கு.முடி மன்னன் தலைமையில் பெண்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், படைவெட்டி குடிக்காடு பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையால் சுற்றுவட்டார கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தத்தனூர், வங்காரம், மனப்பத்தூர், நந்தியன் […]

Continue Reading

தூத்துக்குடி பிளஸ்-2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை!

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி, கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில், தூத்துக்குடி மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி, காட்டில் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். குற்றவாளியை விரைந்து கைது செய்யக் கோரி உறவினர்களும் பொதுமக்களும் தூத்துக்குடி – மதுரை தேசிய […]

Continue Reading

அரியலூரில் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை ஆய்வு செய்ய வேண்டும் அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் கோரிக்கை

  செய்தியாளர் : பாலசுப்பிரமணியம்    அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் கல்குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு பொறுப்பு வழங்கியுள்ளது. அதேபோல் […]

Continue Reading

மாவட்ட தலைமை அலுவலகங்கள் பல அரியலூருக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர் கோரிக்கை

    அரியலூர் கோட்டாட்சியர் பிரேமி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கலந்துகொண்டு, பேசுகையில்   பொதுப்பணித்துறை வசமுள்ள கண்டராதித்தம் செம்பியன் மாதேவி பேரேரி 1580 ஏக்கரில் 416 ஏக்கரே உள்ளது 1200 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளதனை உடனடியாக அளவீடு செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேல வண்ணம் ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற […]

Continue Reading

அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தியின் 35 வது நினைவு தினம் அனுசரிப்பு.

  செய்தியாளர் : பாலசுப்பிரமணியம்   அரியலூரில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35 வது நினைவு தின, நினைவேந்தல் நிகழ்ச்சி ,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது.செட்டியே ஏரி கரை பூங்காவிலுள்ள கர்மவீரர் காமராஜர் சிலைக்கு முன்பு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஜி. இராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர், நகர காங்கிரஸ் பொறுப்பாளர் எஸ் எம் எஸ் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.அரியலூர் […]

Continue Reading

டாஸ்மாக் பணியாளர்கள் மனஉளைச்சலுடன் பணியாற்றுகின்றனர் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க கோரி மனு

திருச்சி, மே 20:   திருச்சி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு நிர்வாகிகள் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் டாஸ்மாக் திருச்சி மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை மூட தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு உடனடியாக […]

Continue Reading