பெரம்பலூரில் சாலை ஆக்கிரமிப்பால் அவதி – நடவடிக்கை கோரி பொதுமக்கள் வேண்டுகோள்

  செய்தியாளர் :வசந்த் பெரம்பலூர் நகரப் பகுதியில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய இணைப்பு சாலைகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வடக்கு மாதவி சாலை, எம்.ஆர்.நகர், எதிரி ராயல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் கட்டுமான பொருட்கள், கடை விரிவாக்கங்கள் மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக […]

Continue Reading

புகையிலை பொருட்கள் பறிமுதல் : பெட்டிக்கடை உரிமையாளர் கைது

செய்தியாளர்  : ஜேசுராஜ் விக்கிரமங்கலம், மே. 14 – அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணவாளர் தலைமையில் போலீசார் முத்துவாஞ்சேரி பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் சிறிய வணிக நிலையங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது முத்துவாஞ்சேரி கிராமம் அண்ணா நகரைச் சேர்ந்த புகழ் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த […]

Continue Reading

பனை மரத்தில் மொபட் மோதி இளைஞர் உயிரிழப்பு

செய்தியாளர் : ஜேசுராஜ்   விக்கிரமங்கலம், மே 14 – அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சந்திரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் ராமன் (19) உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று ராமன், தனது நண்பருக்கு சொந்தமான மொபட்டில் சந்திரபாளையம் கிராமத்திலிருந்து வி.கைகாட்டி நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் சிமெண்ட் ஆலை அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதி விழுந்தார். […]

Continue Reading

திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் யோகநாதன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை !

  திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றிய நகர அதிமுக சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் யோகநாதன் தலைமையில் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட செயலாளர் யோகநாதன் உப்பிலியாபுரம் துறையூர் பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஒன்றிய நகரக் கழக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று அண்ணா பேருந்து நிலையத்தில் அண்ணா சிலைக்கு மாலை […]

Continue Reading

புளியஞ்சோலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கோடை வெப்பத்தை தணிக்க குடும்பத்துடன் உற்சாக குளியல்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள இயற்கை எழில் கொஞ்சும் புளியஞ்சோலைசுற்றுலாத் தலம், தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு களைகட்டத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு திரண்டு வருவதால், இப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது குடும்பங்களுடன் சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள புளியஞ்சோலைக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான […]

Continue Reading

துறையூரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு போதிய அறிவிப்பின்றி பயணிகள் அவதி

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று தற்காலிக பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதையொட்டி, பேருந்துகளின் புதிய வழித்தடங்கள் மற்றும் நிறுத்துமிடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே முறையான அறிவிப்பு வழங்காததால் வெளியூரிலிருந்து வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். காலை நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு […]

Continue Reading

தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி: 2 பேரை கைது செய்த போலீசார்

தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி: 2 பேரை கைது செய்த போலீசார் செய்தியாளர்:சுபாஷ் செல்வம் பெரம்பலூர் அருகே திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர் பந்தல் பெட்ரோல் பங்க் அருகே வாலிகண்டபுரத்தை சேர்ந்த கருப்பையா என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் அருகே திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் […]

Continue Reading

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் கிளை சார்பில் உலக ரெட் கிராஸ் தினம்

செய்தியாளர்:பாலசுப்பிரமனியன்   அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பொது மக்களுக்கு இலவச நீர்மோர் வழங்கப் பட்டது.மே 8 ல் சுவிட்சர்லாந்த் நாட்டில் பிறந்த ரெட் கிராஸ் நிறுவனரின் பிறந்தநாளை ஆண்டுதோறும் உலக ரெட் கிராஸ் தினமாக உலக நாடுகளால் அனுசரிக்க ப்பட்டுகிறது.ஜீன் ஹென்றி டுனாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் அரியலூர் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கும் இலவச நீர் மோர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட கிளையின் […]

Continue Reading

விக்கிரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்தல்: வாலிபர் கைது

செய்தியாளர் : ஜேசுராஜ் விக்கிரமங்கலம், மே 12 – அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசார், சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக ஸ்ரீபுரந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ரோந்து பணியை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் தலைமையில் போலீசார் மேற்கொண்டனர். அப்போது, கூத்தாடி ஏரிக்கரை அருகே சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் மறித்து சோதனை செய்தனர். விசாரணையில், அவர் ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் […]

Continue Reading

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு? விவசாயிகள் குற்றச்சாட்டு

    செய்தியாளர்  : சுபாஷ் செல்வம்   அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மஞ்சமேடு, திருமழப்பாடி, இளந்தங்கூடம், கண்டிராதீர்த்தம், மேலவரப்பான்குறிச்சி, ஏலாக்குறிச்சி மற்றும் கரைவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களில், ஒரு மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை அதிகாரப்பூர்வமற்ற கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு நிலையத்தில் ஒரு சீசனுக்கு சுமார் 600 முதல் 700 […]

Continue Reading