நீட் தேர்வில் 599 மதிப்பெண்கள்: அரசு பள்ளி மாணவர் தரவரிசையில் நாகை தினேஷ் முதலிடம்

நாகப்பட்டினம் : வேதாரண்யம் வட்டம் பெரியகுத்தகை கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் மு.தினேஷ், நீட் 2026 தேர்வில் 599 மதிப்பெண்கள் பெற்று, தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டு தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற தினேஷின் சாதனையை பாராட்டும் வகையில், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (11.08.2026) பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற […]

Continue Reading

அமைச்சர் நிகழ்ச்சியில் துறையூர் எம்.எல்.ஏ. ‘ஆப்சென்ட்’… பதாகையிலும் இடமில்லை!

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தம்பாளையம் பகுதியில் தனியார் தானிய சேமிப்பு கிடங்கை அரசு வாடகைக்கு எடுத்துள்ள நிலையில், அதற்கான ஒப்பந்தத்தில் கட்டிட உரிமையாளரும், அரசுத் தரப்பினரும் கையெழுத்திடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ராமன் கலந்து கொண்டு, கிடங்கு தொடர்பான பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமாரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால், துறையூர் தொகுதியின் சட்டமன்ற […]

Continue Reading

துறையூரில் தானிய சேமிப்புக்கு புதிய வசதி – 7,500 மெட்ரிக் டன் வாடகை கிடங்கு திறப்பு

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் வெங்கட்ரமணன் திறந்து வைத்தார் துறையூர்: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் தனியார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 7,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வாடகை உணவு தானியக்கிடங்கை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் வெங்கட்ரமணன் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முத்தையம்பாளையம் பகுதியில் தனியாரால் கட்டப்பட்டுள்ள இந்த தானியக்கிடங்கில் நெல், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பாக […]

Continue Reading

போதையில்லா தமிழகம்: திருச்சி பொறியியல் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அடுத்த கொணலை கிராமத்தில் உள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் “போதையில்லா தமிழகம்” என்ற தலைப்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரித் தலைவர் முனைவர் சுஜாதா சுப்ரமணியம், செயலாளர் பொறியாளர் சூர்யா சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் த. முத்தமிழ்ச்சுடர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ப. பிரபாகரன், புல முதல்வர் முனைவர் […]

Continue Reading

நாகையில் ‘போதையில்லா தமிழ்நாடு’ பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு

செய்தியாளர் : விஜய் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு நாகப்பட்டினம், ஆக.11: தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற ‘போதையில்லா தமிழ்நாடு’ பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார், இ.ஆ.ப., கலந்து கொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை […]

Continue Reading

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருச்சி பொறியியல் கல்லூரியில் தூய்மைப் பணி… 60 மாணவர்கள் பங்கேற்பு

  திருச்சி திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அடுத்த கொணலை கிராமத்தில் அமைந்துள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் “தூய்மை இந்தியா” என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டத்தின் சமூகப் பணிகளில் ஒன்றாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்கள் மத்தியில் தூய்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதாகும். மேலும், கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாக பராமரிப்பதன் அவசியம் […]

Continue Reading

உதயநிதி ஸ்டாலின் கைது: துறையூரில் தி.மு.க.வினர் சாலை மறியல் 

  செய்தியாளர் : அருண் 90959 25936 துறையூர், தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சி மாவட்டம் துறையூரில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். அந்தக் கூட்டத்தில் அவர் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக […]

Continue Reading

வறண்ட வாய்க்காலில் ஆடிப்பெருக்கு… நீச்சலடித்து விவசாயிகள் போராட்டம்!

செய்தியாளர் : விஜய் நாகை, ஆக. 3: நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி கிராமத்தில், காவிரி நீர் வராததால் வறண்டு கிடக்கும் பாசன வாய்க்காலில் ஆடிப்பெருக்கு விழாவை விவசாயிகள் மற்றும் பெண்கள் நூதன முறையில் கடைப்பிடித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்த்தனர். வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால், பூ, பழம் வைத்து படையலிட்டு, விளக்கேற்றி பெண்கள் வழிபாடு நடத்தினர். மேலும், பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் மஞ்சள் கயிறு கட்டி பாரம்பரிய சடங்குகளை மேற்கொண்டனர். கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் […]

Continue Reading

துறையூரில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு விளக்க கருத்தரங்கம் – பிரின்ஸ் கஜேந்திர பாபு பங்கேற்பு

  துறையூரில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது பிரின்ஸ் கஜேந்திர பாபு பங்கேற்பு திருச்சி மாவட்டம் துறையூரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலை கலை இலக்கிய பேரவை ஒருங்கிணைக்கும் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு விளக்க கருத்தரங்கம் நேற்று (02.08.2026) மாலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் க. நிலவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரவையின் மாவட்ட அமைப்பாளர் பீட்டர் செல்வரத்தினம் வரவேற்புரையாற்றினார். துறையூர் சட்டமன்றத் தொகுதி மாவட்டச் […]

Continue Reading

ஸ்டாலின் தான் தற்போது தனித்து விடப்பட்டுள்ளார் – திருச்சியில் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பேட்டி

  செய்தியாளர்  : அருண் – 90959 25936 மாமன்னர் தீரன் சின்னமலையின் 212வது நினைவு தினத்தையொட்டி திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் உள்ள தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் நவல்பட்டு விஜி, தினேஷ், கதிரவன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து அறநிலைதுறை அமைச்சர் ரமேஷ் இந்தியா முழுவதும் உள்ள தலைவர்கள் பாராட்டும் வகையில் […]

Continue Reading