துறையூரில் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி

துறையூர் : திருச்சி மாவட்டம், துறையூர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது. துறையூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வீரமணி தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர், அங்கக மற்றும் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல், உயிர் உரங்களை பயன்படுத்துதல் மற்றும் […]

Continue Reading

அமைச்சர் நிகழ்ச்சியில் துறையூர் எம்.எல்.ஏ. ‘ஆப்சென்ட்’… பதாகையிலும் இடமில்லை!

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தம்பாளையம் பகுதியில் தனியார் தானிய சேமிப்பு கிடங்கை அரசு வாடகைக்கு எடுத்துள்ள நிலையில், அதற்கான ஒப்பந்தத்தில் கட்டிட உரிமையாளரும், அரசுத் தரப்பினரும் கையெழுத்திடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ராமன் கலந்து கொண்டு, கிடங்கு தொடர்பான பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமாரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால், துறையூர் தொகுதியின் சட்டமன்ற […]

Continue Reading

உதயநிதி ஸ்டாலின் கைது: துறையூரில் தி.மு.க.வினர் சாலை மறியல் 

  செய்தியாளர் : அருண் 90959 25936 துறையூர், தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சி மாவட்டம் துறையூரில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். அந்தக் கூட்டத்தில் அவர் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக […]

Continue Reading

துறையூரில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு விளக்க கருத்தரங்கம் – பிரின்ஸ் கஜேந்திர பாபு பங்கேற்பு

  துறையூரில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது பிரின்ஸ் கஜேந்திர பாபு பங்கேற்பு திருச்சி மாவட்டம் துறையூரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலை கலை இலக்கிய பேரவை ஒருங்கிணைக்கும் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு விளக்க கருத்தரங்கம் நேற்று (02.08.2026) மாலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் க. நிலவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரவையின் மாவட்ட அமைப்பாளர் பீட்டர் செல்வரத்தினம் வரவேற்புரையாற்றினார். துறையூர் சட்டமன்றத் தொகுதி மாவட்டச் […]

Continue Reading

துறையூரில் மாநில கராத்தே போட்டி கோலாகலம்; 200 மாணவர்கள் அசத்தல்!

செய்தியாளர்:அருண் – 90959 25936   திருச்சி மாவட்டம் துறையூரில்  சர்வதேச ஷிடோரியோ கராத்தே மற்றும் கோபுடோ மையத்தின் சார்பில் 6-வது ஆண்டு மாநில அளவிலான கராத்தே மற்றும் கோபுடோ போட்டி, துறையூர் சி.எம்.எஸ். கூட்டுறவு திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கராத்தே மற்றும் கோபுடோ பிரிவுகளில் தங்களது தற்காப்புக் கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர். வயது அடிப்படையில் நடைபெற்ற போட்டிகளில் போட்டியாளர்கள் உற்சாகத்துடன் […]

Continue Reading

துறையூர் நகர்மன்றத்தில் பரபரப்பு… குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து திமுக வாக்அவுட்!

  செய்தியாளர்: அருண் 9095925936 திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம்  நகர்மன்றத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சியின் நிர்வாகம், வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தின் போது, துறையூர் நகராட்சி சார்பில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீருக்கான கட்டணம்  உயர்த்தப்பட்டிருப்பது குறித்து திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்றும், எந்தவித முன்னறிவிப்பும் […]

Continue Reading

32 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர்

செய்தியாளர் -அருண்: 9095925936 திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்த கொப்பம்பட்டியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகக் கட்டிடத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பொதுமக்கள் வருவாய்த்துறை சார்ந்த சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய அலுவலகம், அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் முக்கியமான திட்டமாக கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசின் நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக […]

Continue Reading

துறையூர் அருகே இமயம் கல்லூரியில் தடகளப் போட்டி; 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூரில் அமைந்துள்ள இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான இடையேயான தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றன. போட்டிகளுக்கு முன்னதாக மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி, விளையாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டதுடன், சமாதானம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. முசிறி டிஎஸ்பி முத்துக்குமார், கல்லூரி தாளாளர் ஆண்டி மற்றும் இயக்குநர் ஜனார்த்தனன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி […]

Continue Reading

துறையூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக நியமனம் செய்யப்பட்ட என்.தன்ராஜ் தலைமையில் எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துறையூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக, கழக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி நியமனம் செய்துள்ள என்.தன்ராஜ் தலைமையில், சிங்களாந்தபுரத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கும், துறையூர் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கழகக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும் […]

Continue Reading

துறையூரில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்: 100-க்கும் மேற்பட்டோருக்கு அடையாள ஆவணங்கள் வழங்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர்

பழங்குடியின மக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை அரசு சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில் இச்சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன. மேலும், பழங்குடியின மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளையும் அதிகாரிகள் கேட்டறிந்து, அவற்றை விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Continue Reading