இன்ஸ்டாகிராம் காதல் வலையில் சிக்கிய சிறுமி மீட்பு; இளைஞர் போக்சோவில் கைது!

  செய்தியாளர் ; ஜேசுராஜ் அரியலூர்: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அரியலூரில் உள்ள தனியார் தட்டச்சு பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். சம்பவத்தன்று காலை பயிற்சிக்குச் சென்ற அவர் வீடு திரும்பாததால், அவரது தாத்தா விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் […]

Continue Reading

வைகாசி அமாவாசை: முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம்

  செய்தியாளர் சுபாஷ் செல்வம் பெரம்பலூர் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதில் பெண்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உலக நன்மை, பருவமழை செழிப்பு மற்றும் மக்கள் நலன் வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. […]

Continue Reading

விவசாயிகளின்பயிர் கடன் முழுமையாக அரசு தள்ளுபடி செய்ய கோரி அரியலூரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஏர்கலப்பையுடன் கண்டன ஆர்ப்பாட்டம்.

அரியலூர்:விவசாயிகளின் பயிர் கடனை , சட்டமன்ற தேர்தலின் போது தமிழக அரசு அளித்த வாக்குறுதியின் படி முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஏர்கலப்பை மற்றும் பயிர்களை கையில் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் பூரா விசுவநாதன் தலைமை வகித்தார். இதில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த சட்டமன்றதேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியின்படி, […]

Continue Reading

வாக்குறுதி கொடுத்த அரசு எங்கே? – துறையூரில் விவசாயிகள் கண்டனக் குரல்!

கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்; 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சோபனபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, சிறு மற்றும் குறு விவசாயிகளின் அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்யவும், பெரிய விவசாயிகளின் கடனில் 50 சதவீதம் […]

Continue Reading

தாகம் தீர்க்கும் மக்கள் சேவை… செல்லூரில் தவெக நிர்வாகிகளின் சிறப்பான முயற்சி

செய்தியாளர் ; விஜய் நாகப்பட்டினம், ஜூன் 5: கோடைகால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் செல்லூர் ஈசிஆர் சாலையில் இரண்டாவது நாளாக நீர் மற்றும் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்கவும், கழகப் பொதுச் செயலாளரின் அறிவுறுத்தலின்படியும், மாவட்ட செயலாளர் மா. சுகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் நாகை வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ். ரூபன் தலைமையில் இந்த மக்கள் […]

Continue Reading

உலக சுற்றுச்சூழல் தினத்தில் நாகையில் மாபெரும் மரம் நடும் இயக்கத்தை தொடங்கி வைத்த கலெக்டர் பிரவீன் குமார்

செய்தியாளர் :விஜய்  நாகப்பட்டினம் | ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாபெரும் மரம் நடும் விழா, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் வட்டம் தெற்கு பொய்கைநல்லூர் கடற்கரை பகுதியில் நடைபெற்ற மாபெரும் மரம் நடும் விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர், முதல் மரக்கன்றை நட்டு பசுமை […]

Continue Reading

காவிரியை காக்க கொந்தளித்த டெல்டா விவசாயிகள்! கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் உருவபொம்மை எரிப்பு

செய்தியாளர் ; விஜய்   நாகப்பட்டினம், ஜூன் 5: காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாட்டு பகுதியில் புதிய அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகை மாவட்டம் பனங்குடி பகுதியில் விவசாயிகள் இன்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மேகதாட்டு அணை திட்டத்தை முன்னெடுக்க அம்மாநில அரசு உறுதியாக செயல்பட்டு […]

Continue Reading

முதல்வருடன் துரை வைகோ எம்.பி சந்திப்பு

  திருச்சி, ஜூன் 5 தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை துரை வைகோ எம்.பி. சந்தித்தார். இதுகுறித்து துரை வைகோ தெரிவித்திருப்பதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை அவரது இல்லத்தில் நேற்று (04.06.2026) மாலை 5 மணிக்கு நேரில் சந்தித்து, எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி, விவசாயிகள் நலன் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் தேவைகள் தொடர்பான முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி விரிவாக கலந்துரையாடினேன். அன்போடு […]

Continue Reading

துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை திருச்சி மாவட்டம் துறையூரில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் (பத்திரப்பதிவு) அலுவலகத்தில் இன்று திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில்லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், பத்திரப்பதிவு பணிகளுக்காக நிலத் தரகர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம் அளவுக்கு அதிகமாக லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்திருந்ததாக கூறப்படுகிறது. […]

Continue Reading

பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்ற கலெக்டர் பிரவீன்குமார்… நாகையில் உற்சாகமாக தொடங்கிய புதிய கல்வியாண்டு!

செய்தியாளர் :விஜய்    நாகப்பட்டினம், ஜூன் 4: 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி நகராட்சிப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்று பாடநூல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன்குமார் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கோடை விடுமுறைக்கு பிறகு மாநிலம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 476 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 116 அரசு […]

Continue Reading