நாகை குப்பைக்கிடங்கில் பயங்கர தீ விபத்து – ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

நாகப்பட்டினம் நகராட்சியின் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. நாகப்பட்டினம் நகராட்சியின் 36 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மேலக்கோட்டை வாசல் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் சேமித்து வைக்கப்படுகின்றன. அங்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தனித்தனியாக தரம் பிரித்து வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாப்பாக சேமிக்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம் மதிப்பில் இரும்பு ஷெட் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை குப்பைக்கிடங்கு வளாகத்தில் சேகரித்து […]

Continue Reading

5.45 லட்சம் பணம், 13 பவுன் நகை கொள்ளை வழக்கில் மின்னல் வேகத்தில் நடவடிக்கை

நாகப்பட்டினம் நகர காவல் சரகத்திற்குட்பட்ட கடற்கரைச் சாலையில் வசித்து வரும் வில்சன் (60), தேவன் மகன், மரவாடி ரோடு, வேதநாயகன் செட்டி தெரு, நாகப்பட்டினம் என்பவரது வீட்டில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி ரூ.5 லட்சத்து 45 ஆயிரம் பணம் மற்றும் 13 பவுன் தங்க நகைகள் மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டதாக நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் […]

Continue Reading

EGS பிள்ளை கல்லூரியில் ஒலிம்பிக் மற்றும் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம் E.G.S. பிள்ளை கல்வி நிறுவனங்கள் கல்லூரியில் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சமூக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விளையாட்டின் முக்கியத்துவம், உடல்நலம், ஒழுக்கம் மற்றும் இளைஞர்கள் விளையாட்டில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, இணையவழி மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது, போதைப்பொருட்களின் தீமைகள் மற்றும் அவற்றை ஒழிப்பதில் இளைஞர்களின் பங்கு […]

Continue Reading

நாகை புதிய கடற்கரையில் யோகா பயிற்சி; மாணவர்கள் உற்சாக பங்கேற்பு

செய்தியாளர் :விஜய் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் மாவட்ட அரசு சித்த மருத்துவத் துறை சார்பில் யோகா பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. நாகப்பட்டினம் அருகே கருவேலங்கடை தூய மைக்கேல் அகாடமி பள்ளி மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினர். நிகழ்ச்சிக்கு அரசு போக்குவரத்து […]

Continue Reading

முதல்வர் விஜய் பிறந்தநாளில் மனிதநேயம் மலர்ந்தது: ரத்ததான முகாமை தொடங்கி வைத்த துணை சபாநாயகர் ரவிசங்கர்

செய்தியாளர் : அருண் – 90959 25936 திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு சமூகநலத் திட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டதுடன், துறையூர் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமும் நடைபெற்றது. இந்த முகாமை துணை சபாநாயகர் ரவிசங்கர் தொடங்கி வைத்து, ரத்ததானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மருத்துவ முகாமில் பங்கேற்ற 11 […]

Continue Reading

உலக யோகா தினம்: 600 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி

செய்தியாளர் : விஜய் உலக யோகா தினத்தை முன்னிட்டு நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் சிறப்பு யோகா நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி பல்வேறு யோகாசனங்களை செய்து யோகாவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளியின் ஆச்சாரியார் சுவாமி ராமகிருஷ்ணானந்தா அவர்கள் தலைமை தாங்கி, யோகா மனிதனின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த கலையாகும் என வலியுறுத்தினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு யோகா செய்வதால் உடலில் ஏற்படும் நன்மைகள், மனஅழுத்தம் […]

Continue Reading

தந்தையர் தின விழா கோலாகலம்: பெற்றோர்களுடன் குழந்தைகள் உற்சாக கொண்டாட்டம்

  செய்தியாளர் : விஜய் நாகப்பட்டினம் அருகே கருவேலங்கடையில் அமைந்துள்ள தூய மைக்கேல்ஸ் அகாடமி பள்ளி வளாகத்தில் தந்தையர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில், பெற்றோர்களுக்காக ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கிரிக்கெட், பந்துகள் சேகரித்தல் மற்றும் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை […]

Continue Reading

நாகப்பட்டினத்தில் ஜமாபந்தி ஆய்வு; வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இரண்டாம் நாள் நிகழ்வில் பங்கேற்று நிலப் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்ந்த அனைத்து திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கும் அவர் தலைமை வகித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியரின் […]

Continue Reading

புதிய ரேஷன் கடை திறந்தும் பயனில்லை? வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே விநியோகம் என மக்கள் வேதனை!

செய்தியாளர் ; வசந்த் பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ரேஷன் கடையில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டதால் அனைத்து நாட்களிலும் பொருட்கள் வழங்கப்படும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே செயல்படும் என கூறப்படுவதால் முதியவர்கள், பெண்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, […]

Continue Reading

வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள்” – புறவழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் போர்க்கொடி

செய்தியாளர் விஜய் நாகப்பட்டினம், ஜூன் 17: நாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் வேளாங்கண்ணி அகல புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேளாங்கண்ணி அகல புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக தமிழக அரசு ரூ.76 கோடியே 47 லட்சத்து 68 ஆயிரம் நிதி ஒதுக்கியுள்ளது. இதற்காக நில அளவீட்டு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் வந்தபோது, சாலை அமைக்கப்பட உள்ள பகுதிகளில் விவசாய நிலங்கள், மா மற்றும் தென்னை […]

Continue Reading