நாகப்பட்டினத்தில் ஜமாபந்தி ஆய்வு; வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இரண்டாம் நாள் நிகழ்வில் பங்கேற்று நிலப் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்ந்த அனைத்து திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கும் அவர் தலைமை வகித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியரின் […]

Continue Reading

வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள்” – புறவழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் போர்க்கொடி

செய்தியாளர் விஜய் நாகப்பட்டினம், ஜூன் 17: நாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் வேளாங்கண்ணி அகல புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேளாங்கண்ணி அகல புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக தமிழக அரசு ரூ.76 கோடியே 47 லட்சத்து 68 ஆயிரம் நிதி ஒதுக்கியுள்ளது. இதற்காக நில அளவீட்டு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் வந்தபோது, சாலை அமைக்கப்பட உள்ள பகுதிகளில் விவசாய நிலங்கள், மா மற்றும் தென்னை […]

Continue Reading

தாகம் தீர்க்கும் மக்கள் சேவை… செல்லூரில் தவெக நிர்வாகிகளின் சிறப்பான முயற்சி

செய்தியாளர் ; விஜய் நாகப்பட்டினம், ஜூன் 5: கோடைகால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் செல்லூர் ஈசிஆர் சாலையில் இரண்டாவது நாளாக நீர் மற்றும் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்கவும், கழகப் பொதுச் செயலாளரின் அறிவுறுத்தலின்படியும், மாவட்ட செயலாளர் மா. சுகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் நாகை வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ். ரூபன் தலைமையில் இந்த மக்கள் […]

Continue Reading

உலக சுற்றுச்சூழல் தினத்தில் நாகையில் மாபெரும் மரம் நடும் இயக்கத்தை தொடங்கி வைத்த கலெக்டர் பிரவீன் குமார்

செய்தியாளர் :விஜய்  நாகப்பட்டினம் | ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாபெரும் மரம் நடும் விழா, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் வட்டம் தெற்கு பொய்கைநல்லூர் கடற்கரை பகுதியில் நடைபெற்ற மாபெரும் மரம் நடும் விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர், முதல் மரக்கன்றை நட்டு பசுமை […]

Continue Reading

காவிரியை காக்க கொந்தளித்த டெல்டா விவசாயிகள்! கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் உருவபொம்மை எரிப்பு

செய்தியாளர் ; விஜய்   நாகப்பட்டினம், ஜூன் 5: காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாட்டு பகுதியில் புதிய அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகை மாவட்டம் பனங்குடி பகுதியில் விவசாயிகள் இன்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மேகதாட்டு அணை திட்டத்தை முன்னெடுக்க அம்மாநில அரசு உறுதியாக செயல்பட்டு […]

Continue Reading

பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்ற கலெக்டர் பிரவீன்குமார்… நாகையில் உற்சாகமாக தொடங்கிய புதிய கல்வியாண்டு!

செய்தியாளர் :விஜய்    நாகப்பட்டினம், ஜூன் 4: 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி நகராட்சிப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்று பாடநூல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன்குமார் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கோடை விடுமுறைக்கு பிறகு மாநிலம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 476 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 116 அரசு […]

Continue Reading

மேட்டூர் அணை தண்ணீர், பயிர்க்கடன் தள்ளுபடி: நாகை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அனல் பறந்த விவாதங்கள்; வெளிநடப்பால் பரபரப்பு!

  செய்தியாளர் :விஜய்  நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளையும், ஆதங்கங்களையும் முன்வைத்துப் பேசினர். தலைமைச் செயலக முற்றுகை எச்சரிக்கை கூட்டத்தில் பேசிய விவசாயி சக்திவேல் “புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், […]

Continue Reading

நாகப்பட்டினம் கலெக்டராக பிரவீன்குமார் பொறுப்பேற்பு: மக்களின் நலனே முதன்மை என உறுதி

செய்தியாளர் :விஜய்   நாகப்பட்டினம், ஜூன் 1: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக (கலெக்டர்) பிரவீன்குமார் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தனது பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். முன்னதாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ஆகாஷ், மதுரை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பிரவீன்குமார், நாகப்பட்டினம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: […]

Continue Reading

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட மகனின் உடலை மீட்டுத்தர கோரி பெற்றோர் மனு

செய்தியாளர்: விஜய்  நாகப்பட்டினம் மாவட்டம் ஏனங்குடி அருகே உள்ள ப.புளியக்குடியைச் சேர்ந்த விவசாயி பாஸ்கரன், தனது உறவினர்களுடன் நேற்று நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- “எனக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். எனது முதல் மகன் பார்த்தசாரதி (27), இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு கடந்த 2022-ஆம் ஆண்டு வேலைக்காக மலேசியா சென்றார். அங்கு அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் கையுறைகள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் […]

Continue Reading

வேளாங்கண்ணி பேராலயத்தில் சர்ச்சை ஏற்படுத்திய வாசிப்பு தவறு… அதிபர் விளக்கம்

        செய்தியாளர் : விஜய்   வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் சிறுவன் வாசித்த மன்றாட்டில் ஏற்பட்ட தவறுக்கு பேராலய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் பிரசித்தி பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி மாலை குடந்தை ஆயர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற திருப்பலியின் போது, நம்பிக்கையாளர்கள் மன்றாட்டு வாசிப்பில் […]

Continue Reading