பறிமுதல் செய்யப்பட்ட 495 கிலோ புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு

  செய்தியாளர்: ஜேசுராஜ்  அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த 2023ஆம் ஆண்டு முதல் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற புகையிலை பொருட்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்து வந்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 495 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் விக்கிரமங்கலம் போலீஸ் நிலைய குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.   இந்நிலையில், ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் மன்றத்தின் உத்தரவின்பேரில், அந்த புகையிலை பொருட்களை அழிக்கும் நடவடிக்கை […]

Continue Reading

அரியலூரில் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்.

அரியலூர் ஸ்ரீ ராமஜெயம் திருமண மண்டபத்தில் மாவட்ட அதிமுக சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தொடர் ந்து அவர் பேசுகையில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் , இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தன்னை 25000/- வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கும், பொது […]

Continue Reading

அரியலூரில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர், மே 16: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திராவிடர் கழகம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக ஒன்றிய தலைவர் சி. சிவக்கொழுந்து, திமுக ஒன்றிய செயலாளர் தெய்வ இளையராஜன், நகர திமுக செயலாளர் இரா. முருகேசன், திமுக ஒன்றிய செயலாளர் ம. […]

Continue Reading

புகையிலை பொருட்கள் பறிமுதல் : பெட்டிக்கடை உரிமையாளர் கைது

செய்தியாளர்  : ஜேசுராஜ் விக்கிரமங்கலம், மே. 14 – அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணவாளர் தலைமையில் போலீசார் முத்துவாஞ்சேரி பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் சிறிய வணிக நிலையங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது முத்துவாஞ்சேரி கிராமம் அண்ணா நகரைச் சேர்ந்த புகழ் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த […]

Continue Reading

பனை மரத்தில் மொபட் மோதி இளைஞர் உயிரிழப்பு

செய்தியாளர் : ஜேசுராஜ்   விக்கிரமங்கலம், மே 14 – அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சந்திரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் ராமன் (19) உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று ராமன், தனது நண்பருக்கு சொந்தமான மொபட்டில் சந்திரபாளையம் கிராமத்திலிருந்து வி.கைகாட்டி நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் சிமெண்ட் ஆலை அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதி விழுந்தார். […]

Continue Reading

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் கிளை சார்பில் உலக ரெட் கிராஸ் தினம்

செய்தியாளர்:பாலசுப்பிரமனியன்   அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பொது மக்களுக்கு இலவச நீர்மோர் வழங்கப் பட்டது.மே 8 ல் சுவிட்சர்லாந்த் நாட்டில் பிறந்த ரெட் கிராஸ் நிறுவனரின் பிறந்தநாளை ஆண்டுதோறும் உலக ரெட் கிராஸ் தினமாக உலக நாடுகளால் அனுசரிக்க ப்பட்டுகிறது.ஜீன் ஹென்றி டுனாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் அரியலூர் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கும் இலவச நீர் மோர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட கிளையின் […]

Continue Reading

விக்கிரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்தல்: வாலிபர் கைது

செய்தியாளர் : ஜேசுராஜ் விக்கிரமங்கலம், மே 12 – அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசார், சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக ஸ்ரீபுரந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ரோந்து பணியை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் தலைமையில் போலீசார் மேற்கொண்டனர். அப்போது, கூத்தாடி ஏரிக்கரை அருகே சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் மறித்து சோதனை செய்தனர். விசாரணையில், அவர் ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் […]

Continue Reading

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு? விவசாயிகள் குற்றச்சாட்டு

    செய்தியாளர்  : சுபாஷ் செல்வம்   அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மஞ்சமேடு, திருமழப்பாடி, இளந்தங்கூடம், கண்டிராதீர்த்தம், மேலவரப்பான்குறிச்சி, ஏலாக்குறிச்சி மற்றும் கரைவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களில், ஒரு மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை அதிகாரப்பூர்வமற்ற கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு நிலையத்தில் ஒரு சீசனுக்கு சுமார் 600 முதல் 700 […]

Continue Reading

அரியலூர் – நகரில் ஒப்பில்லாத அம்மன் தேரோட்டம் ஜமீன்தார் தொடங்கிவைத்தார்

  செய்தியாளர் : கேப்டன் வசந்த்   அரியலூர் – நகரில் ஒப்பில்லாத அம்மன் தேரோட்டம் ஜமீன்தார் தொடங்கி வைக்க பொதுமக்கள் வடம் பிடிக்க வீதிகளில் அசைந்தாடி வந்த திருத்தேர். அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோவில் தேரோட்டத்தை யொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ஒப்பில்லாதம்மனை தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் கோவில் ஜமீன்தார்களின் வம்சாவழி கோவிலாகவும், பல […]

Continue Reading

கடலை அடிக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளர் பலி – அரியலூரில் சோக சம்பவம்

விக்கிரமங்கலம், ஏப்ரல் 28: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஆலவாய் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் ராமர் (27), விவசாயக் கூலி தொழிலாளி ஆவார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அரியமுத்துவுக்கு சொந்தமான டிராக்டருடன் இணைக்கப்பட்ட கடலை அடிக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக ராமரின் இடது கை இயந்திரத்தில் சிக்கிக்கொண்டது. இந்த விபத்தில் அவரது கை கடுமையாக நசுங்கியதுடன், முதுகுத் தண்டுவடமும் பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரியலூர் […]

Continue Reading