அரியலூர் நகராட்சி பகுதிகளில் திமுக வேட்பாளர் லதா பாலு தீவிர ஓட்டு வேட்டை

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகளில், திமுக சார்பில் போட்டியிடும் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் லதா பாலு வீதி வீதியாக சென்று, திமுக அரசின் கடந்த ஐந்து ஆண்டுகால மக்கள் நல திட்டங்களை பொதுமக்களிடம் விளக்கி கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அனைத்து வார்டுகளிலும் வார்டு திமுக செயலாளர்கள் மற்றும் நகர திமுக நிர்வாகிகள் சார்பில் உற்சாகமான & வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர திமுக செயலாளர் இரா. முருகேசன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் […]

Continue Reading

தா.பழூர் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தாமரை. எஸ் .இராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு.

அரியலூர்,ஏப்.13: அரியலூர் மாவட்டம், தா.பழூர் மேற்கு ஒன்றியத்துக்கு ட்பட்ட கிராம ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.இராஜேந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டார் காங்கேயன்பேட்டை,காந்திநகர்,அம்பலவர்கட்டளை,உடையவர் தீயனூர்,பெருமாள் தீயனூர், செங்குழி, மலைமேடு,அரசநிலை யிட்டபுரம், விக்கிரமங்கலம், அம்பாபூர், சாலை, ஆலவாய்,கீழநத்தம், மழவராயநல்லூர், கோவில்சீமை உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் பிரசாரம்மேற்கொண்ட அவர், கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங் கள் குறித்தும்,கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் குடிநீர் வரி, சொத்த வரி […]

Continue Reading

அருங்கால் கிராமத்தில் திமுக வேட்பாளர் லதா பாலு தீவிர வாக்கு சேகரிப்பு

அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லதா பாலு, அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அருங்கால் கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தோழமைக் கட்சியினருடன் இணைந்து வீடு தோறும் சென்று பொதுமக்களை சந்தித்த அவர், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். முன்னதாக திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் வேட்பாளர் லதா பாலுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட திமுக துணைசெயலாளர் அருங்கால் சி.சந்திரசேகரன், ஒன்றிய திமுகசெயலாளர் மா. அன்பழகன், மதிமுக மாவட்டச் செயலாளர் […]

Continue Reading

சின்ன நாகலூரில் அதிமுக வேட்பாளர் நெல் வயலில் இறங்கி வாக்கு சேகரிப்பு

அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடும் தாமரை எஸ். ராஜேந்திரன், நெல் வயலில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, விவசாயிகளிடம் அதிமுக தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை வழங்கி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் முன்னாள் எம்பி இளவரசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் வடிவேல் முருகன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் […]

Continue Reading

அரியலூர் அரசு கலைக் கல்லூரி 56வது பட்டமளிப்பு விழா

அரியலூர் அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தில் 56 – ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் சே. சித்ரா விழாவிற்கு தலைமை வகித்தார். . விழாவில் சிறப்பு விருந்தினராக, தஞ்சாவூர் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் அ.குணசேகரன் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றிப் 241 மாணவர்கள், 610 மாணவியர்கள் என 851 நபர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் பல்கலைக் கழக அளவில்,முதுகலை வரலாற்றுத் துறை மாணவர்ஆர்.வெங்கடேசன்,பல்கலைக்கழக அளவில் 2 வது […]

Continue Reading

பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் மாணவர்களிடையே உரை

வாழ்க்கையை வசப்படுத்த எண்ணங்களை மேம்படுத்துங்கள்: கல்லூரி ஆண்டு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் மாணவர்களிடையே உரை ஏப்ரல் 9, 26, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா இளைஞர் எழுச்சி விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் பொறுப்பு முனைவர் பெ. ராமராஜ் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். கணிதத்துறை தலைவர் முனைவர் கி. சக்திவேல் அனைவரையும. வரவேற்றார். […]

Continue Reading

த.மங்கபட்டி சமத்துவபுர முறைகேடு: தேர்தலை புறக்கணித்த பொதுமக்கள் – அதிமுக வேட்பாளர் நேரில் பேச்சுவார்த்தை!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, தகுதியற்றவர்களுக்கு சமத்துவபுர வீடுகள் ஒதுக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உப்பிலியபுரம் ஒன்றியம், த.மங்கபட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். எனினும், இந்த சமத்துவபுரத்திற்கு பயனாளிகளைத் தேர்வு செய்வதில் தொடக்கத்திலிருந்தே பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். ஏற்கனவே சொந்த வீடும், விவசாய […]

Continue Reading

துறையூரில் பழமையான கோவில் சிலைகள் சேதம்: பெண் உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை கோரி புகார்

திருச்சி மாவட்டம் துறையூரில் பழமையான காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துறையூர் மூங்கில் தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள இந்த கோவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள வசந்த மண்டபத்தின் முகப்பில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அகத்தியர், மார்க்கண்டேயர் வரலாறு, சிவன், பார்வதி, நந்தி, சிவலிங்கங்கள் உள்ளிட்ட சுமார் 15 சுதை சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த 2024ஆம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேகம் […]

Continue Reading

நடனமாடி வாக்கு சேகரித்த பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் களம் காண்கிறார். இந்நிலையில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு தொகுதிகளில் தினந்தோறும் பொது மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட எறையூரில் நரிக்குறவமக்களிடம் இன்று வாக்கு சேகரிப்பு ஈடுபட்டபோது நரிக்குற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துடன் நரிக்குற மக்கள் மற்றும் வெற்றி வேட்பாளர் இளம்பை.இரா. தமிழ்செல்வன்‌ நடனமாடி அனைவரையும் உற்சாகபடுத்தி […]

Continue Reading

அரியலூரில் எஸ். இராஜ்குமார் வேட்புமனு தாக்கல்

அரியலூர், ஏப். 9: அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் எஸ். இராஜ்குமார், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் வருவாய் கோட்டாட்சியருமான செல்வி த. பிரேமியிடம் வழங்கி, உறுதிமொழி வாசித்தார். இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏ.ஆர்.வி. தமிழரசன், சுள்ளங்குடி சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Continue Reading