துறையூரில் பழமையான கோவில் சிலைகள் சேதம்: பெண் உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை கோரி புகார்

திருச்சி மாவட்டம் துறையூரில் பழமையான காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துறையூர் மூங்கில் தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள இந்த கோவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள வசந்த மண்டபத்தின் முகப்பில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அகத்தியர், மார்க்கண்டேயர் வரலாறு, சிவன், பார்வதி, நந்தி, சிவலிங்கங்கள் உள்ளிட்ட சுமார் 15 சுதை சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த 2024ஆம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேகம் […]

Continue Reading

துறையூர் தொகுதியில் தவெக வேட்பாளர் ரவிசங்கர் வேட்புமனு தாக்கல்

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் தவெக கட்சியின் வேட்பாளராக திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரவிசங்கர் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ரவிசங்கர் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் துறையூர் பாலக்கரை பகுதியில் இருந்து மேளதாளம் முழங்க, விசில் சத்தத்துடன் உற்சாக ஊர்வலமாக புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி சென்றார். பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வு துறையூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் பிஜய்குமார்தாஸ், […]

Continue Reading

துறையூர் அருகே நேரு நினைவுக் கல்லூரியில் XR & DT புதிய பாடத்திட்டம் அறிமுகம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புத்தனாம்பட்டியில் செயல்பட்டு வரும் நேரு நினைவுக் கல்லூரியில், உலகளாவிய முக்கியத்துவம் பெற்ற எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி (XR) மற்றும் டிஜிட்டல் ட்வின் (DT) தொடர்பான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய பாடத்திட்டம், எதிர்காலத்தில் வேகமாக வளர்ச்சி அடையும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைக்கு துணைபுரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்துறை நிறுவனங்களில் XR மற்றும் DT தொடர்பான திறன்களுக்கு அதிகமான தேவை உருவாகி வருவதால், கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு இது புதிய வாய்ப்புகளை […]

Continue Reading

துறையூர் தொகுதி காங்கிரஸிற்கு ஒதுக்கீடு: திமுகவினர் அண்ணா சிலை அருகே திரண்டு அதிரடி போராட்டம்!

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய திமுக தலைமையின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளூர் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், துறையூர் தனித் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, துறையூர் தொகுதி திமுகவினர் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, துறையூர் அண்ணா […]

Continue Reading

துறையூர் அருகே பச்சைமலை மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பச்சைமலை பகுதியில், மலைவாழ் மக்கள் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சைமலை பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி சேலம் மாவட்டத்தில் ஒரு ஊராட்சியும், திருச்சி மாவட்டத்தில் மூன்று ஊராட்சிகளும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான 108 ஆம்புலன்ஸ் சேவை அரசு மருத்துவமனை அமைத்தல் மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி தேசியமயமாக்கப்பட்ட வங்கி வசதி போன்ற 10 […]

Continue Reading

துறையூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 1.5 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி பகுதியில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெரியசாமி தலைமையில் காவலர்கள் கார்த்திக், நடராஜன், அண்ணாமலை உள்ளிட்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சியில் இருந்து வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது, காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.5 லட்சம் ரொக்கம் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. […]

Continue Reading

துறையூர் அருகே அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் நான்கரை வயது சிறுவன் பலி

  திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் கண்ணனூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள முருகன் கோவில் தெரு நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் வயது 34 இவரது மனைவி திவ்யா இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள் இவருடைய மகன் பிரஜன் வயது 4 1/2 துறையூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டு சரியாகி மீண்டும் சளி தொந்தரவு இருந்ததாக […]

Continue Reading

துறையூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து முழக்கம்

துறையூர் | மார்ச் 15, 2026 திருச்சி மாவட்டம் துறையூரில், சமையல் எரிவாயு (சிலிண்டர்) தட்டுப்பாட்டைக் கண்டித்தும், அதனைச் சீர்செய்யத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது நிலவி வரும் வளைகுடா போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் உள்ளூரிலும் எதிரொலிப்பதன் விளைவாக, துறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் […]

Continue Reading

துறையூரில் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு

2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள மத்திய ரிசர்வ் படை மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து துறையூரில் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர். முசிறி சரக டிஎஸ் பி முத்துக்குமார் துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஓம் பிரகாஷ் மற்றும் முசிறி தொட்டியம் தா.பேட்டை உப்பிலியபுரம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் மத்திய ரிசர்வ் படையினர் 500க்கும் மேற்பட்டோர் துறையூர் காவல் நிலையத்தில் இருந்து திருச்சி […]

Continue Reading

துறையூர் அருகே எரகுடியில் அம்மா பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள எரகுடி பகுதியில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மைன்ஸ் எஸ். தங்கவேல் தலைமையிலிருந்து சுமார் 700 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்சோதி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், துறையூர் சட்டமன்ற தொகுதியில் வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் […]

Continue Reading